நாளை (மார்ச் 31) திங்கட்கிழமை நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும் என்று கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறையை தீர்மானிக்க இன்று (மார்ச் 30) மாலை மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் பிறைக்குழு மாநாடு நடைபெற்றது.
இதில் ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டதை தொடர்ந்து, இலங்கை வாழும் முஸ்லிம் மக்கள் நாளை நோன்புப் பெருநாளை கொண்டாடலாம் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.