அரசாங்கத்திற்கு எதிராக இப்போது அதிகம் கூச்சலிடுபவர்கள்தான் அதிகம்பயப்படுகிறார்கள் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கூறினார்.
பெலியத்தயில் நேற்று (மார்ச்29) நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத்தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தியின் முதலாவது பேரணியில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தனது உரையில்…
இதேவேளை, மே மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான சர்ச்சைக்குரியவழக்குகள் தாக்கல் செய்யப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
வழக்குப் பதிவு செய்து வழக்கை விசாரித்த பிறகு குற்றவாளிகள் சிறையில்அடைக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.
இதுவரை மூன்று முன்னாள் அமைச்சர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும்ஜனாதிபதி தெரிவித்தார்.
“நாட்டை திவாலாக்கியவர்கள் மீண்டும் அரசாங்கங்களை அமைக்கவருகிறார்கள். யார் வேண்டுமானாலும் கனவு காணலாம். அவை வெறும்கனவுகள்தான். அவை ஒருபோதும் நிஜமாகாது.”
மூன்று முதல் நான்கு ஆண்டுகளில், பிராந்தியத்தில் மிகக் குறைந்த மின்சாரக்கட்டணங்களைக் கொண்ட நாடாக இலங்கை மாறும் என்றும் ஜனாதிபதிகூறினார்.