By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: நாட்டைக் காப்பாற்ற இராணுவ வீரர்களே எம்மோடு ஒன்றிணையுங்கள்-சஜித் பிரேமதாச-
Share
Notification
Latest News
யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
யாழ்ப்பாணம்
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வன்னிச் செய்திகள்
வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
தீவகச் செய்தி
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!
நெடுந்தீவு
ஈரான் – இஸ்ரோல் இடையே போர் நிறுத்தம் !
உலகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > நாட்டைக் காப்பாற்ற இராணுவ வீரர்களே எம்மோடு ஒன்றிணையுங்கள்-சஜித் பிரேமதாச-
இலங்கைச் செய்தி

நாட்டைக் காப்பாற்ற இராணுவ வீரர்களே எம்மோடு ஒன்றிணையுங்கள்-சஜித் பிரேமதாச-

Last updated: 2024/05/20 at 6:55 PM
Published May 20, 2024 215 Views
Share
4 Min Read
SHARE

நாட்டின் அரசியல் அதிகாரம் சரியான தலைமைத்துவத்தை வழங்கியிருந்தால், இராணுவ வீரர்களால் பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாத்துத் தரப்பட்ட எமது நாடு வளமான நாடாக மாறியிருக்கும். இப்போதும் நாட்டைக் காப்பாற்றும் பணி எம்முன் உள்ளது. திருட்டு, ஊழல், மோசடி, கொள்ளை மற்றும் தேசிய சொத்துக்கள் மற்றும் வளங்களை வீணடிப்பதை இல்லாதொழிக்க  இராணுவ வீரர்கள் தலையிட வேண்டும். நாட்டைக் கட்டியெழுப்பும் மனிதாபிமானப் பணியில் பங்காளராகுமாறு இராணுவ வீரர்களிடம் கோரிக்கை விடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் வலுவான சட்டக் கட்டமைப்பின் மூலம் நாட்டை அழித்த அனைவரும் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவது போலவே, இழந்த வளங்கள் மற்றும் சொத்துக்கள், பணத்தை நாட்டுக்கு மீளப் பெற்றுக்கொடுப்பதற்குத் தேவையான மனிதாபிமான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களுக்கு நன்றி பாராட்டும் முகமாக நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் இராணுவ வீரர்களது மாநாட்டின் 6 ஆவது கட்டம் நேற்று (மே 19) மொனராகலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களினது தலைமையில் மிகவும் வெற்றிகரமானதாக இடம்பெற்றது.

இதில், மொனராகல, பிபில முதலான பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெருமளவிலான ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் ஒன்றுகூடியிருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.

2019 ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சக்தி குறுகிய காலத்தில் இராணுவ வீரர்களுடன் சமூக ஒப்பந்தத்தை எட்டியது. அந்த சமூக ஒப்பந்தம் மிகவும் முறையாகவும், ஒழுங்காகவும், வினைதிறனாகவும், மாவட்ட மட்டத்தில் திட்டமிட்ட முறையிலும் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 6 இராணுவ வீரர் மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. மாவட்ட மட்டத்தில் இராணுவ வீரர்களின் ஆலோசனைகள் கருத்திற்கொள்ளப்பட்டதன் பின்னர் புதிய சமூக ஒப்பந்தம் எட்டப்படும். ‘திவிதென ரணவிரு வேலைத்திட்டம்’ என இதற்குப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஓய்வு பெற்றாலும் இராணுவ வீரர்களின் கடமை முடிந்துவிடவில்லை,

இந்த இராணுவ வீரர்கள் நம் நாட்டிற்காக தங்கள் உயிரை தியாகம் செய்தவர்கள். 220 இலட்சம் மக்களினது சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாத்து தந்தனர்.  அந்தப் பணி இன்னும் முடிவடையவில்லை. நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும், மக்களை ஊக்குவிப்பதற்கும் இன்னும் பல கடமைகள் அவர்களுக்கு உண்டு. அவர்கள் நாட்டின் முக்கிய சமூக அபிவிருத்தி நீரோட்டத்தின் முன்னோடிகளாக மாற வேண்டும் என்றும்  எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இராணுவ வீரர்களை கவனிப்பது நமது கடமை,

நாட்டிற்காக சிறந்த சேவையாற்றிய இந்த இராணுவ வீரர்கள் பாதுகாக்கப்படுவார்கள். அவர்களை கவனித்துக் கொள்வோம். பதவியேற்று 48 மணித்தியாலங்களுக்குள் இராணுவ வீரர்களது பொருளாதார மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு விசேட ஜனாதிபதி செயலனி ஒன்றினை தாபிப்பேன். இராணுவ வீரர்கள் தொடர்பான கட்டளைகள் காலத்திற்கு ஏற்றாற் போல் புதுப்பிக்கப்படும். ஒரே தரம் ஒரே ஓய்வூதியக் கொள்கையை ஆய்வு செய்து வருகிறேன், அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

ரணவிரு சேவா அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட அதிகாரங்களும் ஏற்பாடுகளும் போதுமானதாக இல்லை. இராணுவ வீரர்களின் நலன்புரி செயல்பாடுகளுக்காக அமெரிக்கா தனித்த திணைக்களத்தைக் கொண்டுள்ளது. இந்தத் திணைக்களத்தின் ஊடாக இராணுவ வீரர்களின் நலனுக்காக அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது. இலங்கையில் அவ்வாறானதொரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டு, இராணுவ வீரர்களின் பிரச்சினைகளுக்குப் பதில் வழங்கும் நிறுவனமொன்று ஸ்தாபிக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்கான மாற்று வருமான ஏற்பாடுகள்,

ஓய்வு பெற்ற பிறகு மாற்று வருமான மூலங்களை தோடுவதற்கு படைவீரர்கள் விரும்புகிறார்கள். நாட்டிலுள்ள மக்கள் மத்தியில் அதிக தியாகங்களைச் செய்யக்கூடியவர்கள், தொழில் மற்றும் வளர்ச்சிக்கான ஆக்கப்பூர்வமான யோசனைகளைக் கொண்டவர்கள் என்பதனால், ஓய்வு பெற்ற பிறகும் அவர்களின் தியாகத்திற்கு சரியான பெறுமானம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

மாற்று தொழில்கள் மற்றும் வருமான வழிகளை உருவாக்குவதற்கான பிரவேசத்தற்கு சலுகை அடிப்படையில் நிதி அணுகல் வழங்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இராணுவ வீரர்களின் நலன்புரிக்கு புதிய திட்டம்,

ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் தற்போது பல்வேறு தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். தெளிவான, முறையான சம்பள ஒழுங்குமுறை மற்றும் காப்புறுதி முறைமை இல்லாத காரணத்தினால், திவி தென ரணவிரு நலன்புரி திட்டத்தின் கீழ் காப்புறுதி வழங்கப்படும். ஓய்வு பெற்றவர்களின் சேமிப்புக் கணக்குகளுக்கு அதிக வட்டி வீதம் கிடைத்து வந்தது, என்றாலும் தற்போது அது குறைக்கப்பட்டுள்ளது. எனவே அந்த வட்டி விகிதங்களை மீண்டும் வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இராணுவ வீரர்களுக்கு புதிய அடையாளம்,

திவிதென ரணவிரு அமைப்பின் அடையாளத்தை பாதுகாக்க அடையாள அட்டைகள் வழங்கப்படும். 88/89 எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகளுடனான யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட, ஆதரவற்ற குடும்பங்களுக்கு விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படும். யுதத்தின் போது அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் பாரிய அநீதிக்கு ஆளாகியுள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் அங்கவீனமுற்ள இராணுவ வீரர்களுக்கு தெளிவான அநீதி இழைத்த போதிலும், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அந்தக் கடமைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்

You Might Also Like

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

SUB EDITOR May 20, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article யாழில் 400 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கவுள்ள ஜனாதிபதி!
Next Article வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் நடைபெற்றுவருகின்றது.
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

You Might Also Like

இலங்கைச் செய்தி

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

June 23, 2025
இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

June 20, 2025
இலங்கைச் செய்தி

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?