வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஶ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் நாளையதினம் (ஜூன் 26) வியாழக்கிழமை கொடியேற்றத்துடன்ஆரம்பமாகவுள்ளது.
இதேவேளை உயர்திருவிழா தொடர்பில் சகல பணிகளும் நிறைவுசெய்யப்பட்டு அடியவர்கள் எந்தவித இடையூறுகளும் இன்றி திருவிழா காலத்தில் பயணங்களை மேற்கொண்டு தங்கள் வழிபாடுகளை மேற்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருடாந்த மகோற்சவம் ஜூலை 11 வெள்ளிக்கிழமை இரவு தெப்போற்சவத்துடன்நிறைவு பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.