இளவாலை – சேந்தாங்குளம் கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றஇளைஞன் ஒருவர் சடலமாக நேற்றையதினம் (மார்ச்21) மீட்கப்பட்டுள்ளார். கோவில் வாசல், காங்கேசன்துறை வீதி, இணுவில் என்ற முகவரியைச் சேர்ந்தபி.சாருஜன் (வயது 20) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த இளைஞன் அவரது நண்பர்களுடன் நேற்று (மார்ச்21) குளிப்பதற்காகநேற்று மதியம் இளவாலை – சேந்தாங்குளம் கடலுக்கு சென்றனர். கடலில்குளித்துக்கெண்டு இருந்தவேளை திடீரென கடல் அலையில் அடித்துச்செல்லப்பட்டார்.
இந்நிலையில் குறித்த இளைஞனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போதும் இன்று இளைஞனின் சடலம் கரை ஒதுங்கியது.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரிஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம்யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடல் பகுதியானது பாரிய அலை எழும் பகுதியாக காணப்படுகிறது. இருப்பினும் எந்தவிதமான எச்சரிக்கை அறிவிப்புகளும்காட்சிப்படுத்தப்படவில்லை என்பதுடன் இதற்கு முன்னரும் இவ்வாறு மரணம்இதே பகுதியில் சம்பவித்துள்ளன.
எனவே உரியவர்கள் இப்பகுதியில் எச்சரிக்கை சமிக்ஞைகளைகாட்சிப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.