By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: தோல் நோய்க்கு சிகிச்சை பெற சென்ற சிறுமி உயிரிழப்பு!
Share
Notification
Latest News
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
யாழ்ப்பாணம்
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
இலங்கைச் செய்தி
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
தீவகச் செய்தி
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!
வன்னிச் செய்திகள்
சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > தோல் நோய்க்கு சிகிச்சை பெற சென்ற சிறுமி உயிரிழப்பு!
இலங்கைச் செய்தி

தோல் நோய்க்கு சிகிச்சை பெற சென்ற சிறுமி உயிரிழப்பு!

Last updated: 2023/09/16 at 9:49 AM
Published September 16, 2023 282 Views
Share
1 Min Read
SHARE

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு தோல் நோய்க்கு சிகிச்சை பெற சென்ற சிறுமி ஒருவர் நேற்றுமுன்தினம்(செப்ரெம்பர் 14) வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு திராய்மடு பகுதியை சேர்ந்த முனியாண்டி சாந்தகுமார் சாந்தகுமார் கண்மனி ஆகியோரின் மகளான 17 வயதுடைய சாந்தகுமார் எப்சிகா என்ற சிறுமியே இவவாறு உயிரிழந்துள்ளார்.

குடும்பத்தில் உள்ள ஐந்து பிள்ளைகளில் மூன்றாவது பிள்ளையான குறித்த சிறுமி மட்டக்களப்பு நாவலடி நாமகள் வித்தியாலயத்தில் கல்வி கற்று கல்விப்பொது தராதர சாதாரண தர பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முதல் முகத்தில் தேமல் எனப்படும் தோல் நோய் ஏற்பட்டு அதன் காரணமாக மட்டு போதனா வைத்தியசாலைக்கு தனது சகோதரியுடன் சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.

அங்கு வழங்கப்பட்ட மாத்திரைகளை பாவித்து வரும் நிலையில் கடந்த புதன்கிழமை காய்ச்சலும் வாந்தியும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த சிறுமியின் தாய் அவரை மட்டு போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அப்போது வைத்தியசாலை விடுதியில் சிறுமி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கிய நிலையில் நேற்று வியாழக்கிழமை சிறுமி அதிதீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார்.

அதன்பின் குறித்த சிறுமி இறந்துவிட்டதாக நேற்று மாலை 4 மணிக்கு பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று வியாழக்கிழமை அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது மகளை பிற்பகல் 1 மணியளவில் தான் சென்று பார்த்தபோது மகளின் உடல் குளிர்ந்த நிலையில் இருந்ததாக உயிரிழந்த சிறுமியின் தாய் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மட்டு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி கலாரஞ்சனியிடம் ஊடகவியலாளர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது எனக்கு இது தொடர்பில் எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

எனினும் தமது மகளுக்கு முறையான மருத்துவ பரிசோதனைகளோ அல்லது மருந்துகளோ வழங்கப்படவில்லை என உயிரிழந்த சிறுமியின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

You Might Also Like

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

Anarkali September 16, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article ஈஸ்டர் தாக்குதலின் குற்றவாளிகள் எவராக இருப்பினும் தப்பிக்க முடியாது என்கிறார் ரணில்!
Next Article தாவடியில் பெற்றோல் குண்டுத் தாக்குதல் – காதல் விவகாரம் காரணமாம்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

You Might Also Like

இலங்கைச் செய்தி

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

June 23, 2025
இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

June 20, 2025
இலங்கைச் செய்தி

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?