தெற்காசிய உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ணப் போட்டியில் பங்குபற்றும்இலங்கை 20 வயதுப் பிரிவு பெண்கள் தேசிய அணியில் மகாஜனக் கல்லூரிவீராங்கனைகள் மூவர் இடம்பிடித்துள்ளனர்.
J.லயன்சிகா, T.சஸ்மி, S.கம்சியா ஆகிய வீராங்கனைகளேஇடம்பிடித்துள்ளதுடன் இப்போட்டித் தொடர் பங்களாதேஷில் ஜூலை 11 தொடக்கம் 21 வரை நடைபெறவுள்ளது.
தேசிய அணியில் இடம்பிடித்த இவ்வீராங்கனைகளை வாழ்த்திப் பாராட்டுவதோடு, இவ்வீராங்கனைகளை தேசிய அணியில் இடம்பிடிக்கும் வகையில் சிறப்பானபயிற்சிகளை வழங்கிய பாடசாலைப் பயிற்றுநரையும் வாழ்த்திவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.