தெல்லிப்பளை உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள காணியில் குறிப்பிட்ட பகுதி கடந்த மே 01 அன்று விடுவிக்கப்பட்ட நிலையில் அப் பிரதேசத்திற்கு யாழ் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையிலான குழுவினர் இன்றையதினம் (மே03) நேரடியாக விஜயம் மேற்கொண்டார்.
இதனபோது வசாவிளான் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ளஒட்டகப்புலம் புனித அமலோற்பவ மாதா தேவாலயத்தில் நடைபெற்றபிராத்தனையில் பங்குகொண்டு, அங்கு கூடியிருந்த மக்களுடன்கலந்துரையாடிய குழுவினர் தொடர்ந்து விடுவிக்கப்பட்ட 20 ஏக்கர் காணியினைபொதுமக்களுடன் சென்று பார்வையிட்டார்.
தொடர்ந்து காங்கேசன்துறை மேற்கு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ளமாங்கொல்லை கிராமத்தின் 15.13 ஏக்கர் காணியினையும் அரசாங்க அதிபர் குழுவினர் பார்வையிட்டனர்.
இவ் விஜயத்தின் போது தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சி. சுதீஸ்னர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் வீ.சிவகுமார், பாதுகாப்பு படை அதிகாரிகள் , கிராம அலுவலர்கள், கண்ணிவெடி அகற்றும் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் அப்பிரிவுகளுக்குரிய பொதுமக்கள் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.