நீர் வேலி பகுதியைச் சேர்ந்தவரும் , சாவகச்சேரி உதவி பிரதேசசெயலருமான தமிழினி சதீஸ்(வயது35 ) இன்று (பெப். 16) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக பணிபுரிந்துவந்த இவர் கடந்த வாரம் கடும் தீப் காயங்களுடன் யாழ் போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் ,
ஆறு மாதகர்ப்பிணியாக இருந்த உதவி பிரதேச செயலாளரான பெண் அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தாய் மற்றும் ஆறு மாத சிசுவை உயிருடன்மீட்கும் பணிகளும் இடம் பெற்றது .
இருப்பினும் இன்றைய தினம் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாகஉயிரிழந்துள்ளனர்.
படுக்கை அறையில் மெழுகு திரி எரிந்து தீ விபத்து ஏற்பட்டதாக தனதுவைத்தியசாலை முறைப்பாட்டில் தெரித்துள்ளார் .
இவருக்கு ஆறு வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது கணவர் கோப்பாய்பிரதேச செயலாளர் பிரிவில் கிராம சேவையாளராக பணிபுரிந்து வருகின்றார்இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.