சாவகச்சேரிப் பிரதேசசபையின் தவிசாளர் மற்றும் உபதவிசாளர் தெரிவுஇன்றையதினம் (ஜூன்23) திங்கட்கிழமை பிற்பகல் உள்ளூராட்சி ஆணையாளர்தலைமையில் இடம்பெற்றிருந்த நிலையில் திருவுளச்சீட்டு முறை மூலமாகதவிசாளராக இலங்கை தமிழரசுக் கட்சியின் பொன்னையா குகதாசன் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
அதே நேரம் உபதவிசாளராக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்தஇ.யோகேஸ்வரன் தெரிவாகியிருந்தார்.
மேற்படி தவிசாளர் தெரிவு பெரும்பான்மை உறுப்பினர்களின் தெரிவுக்குஅமைவாக பகிரங்க முறைப்படி இடம்பெற்றிருந்தது.இதன் போது சைக்கிள்–சங்குகூட்டணி சார்பாக செ.மயூரனும்,
இலங்கை தமிழரசு சார்பில் பொ.குகதாசனும் முன்மொழியப்பட்டனர்.
மேற்படி தெரிவுகளில் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்கள்நடுநிலைமை வகித்தனர்.
அதன்பின்னர் சைக்கிள்–சங்கு கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர்தவிசாளர் தெரிவின் போது வாக்களிக்க விருப்பமில்லை எனக் கூறியமையால்இரண்டு தவிசாளர் வேட்பாளர்களும் தலா 10வாக்குகளைப்பெற்றிருந்தனர்.அதன் பின்னர் திருவுளச்சீட்டு ஊடாக தமிழரசின் வேட்பாளர்குகதாசன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
அதேநேரம் உபதவிசாளர் தெரிவின் போது சைக்கிள்–சங்கு கூட்டணி சார்பில்இ.யோகேஸ்வரனும்,தமிழரசு சார்பில் சி.பிரபாகரனும்முன்மொழியப்பட்டிருந்தனர்.
இந்த வாக்கெடுப்பின் போது தவிசாளர் தெரிவில் வாக்களிக்க விருப்பமில்லைஎனக் கூறிய சைக்கிள்–சங்கு கூட்டணி உறுப்பினர் உப தவிசாளர் வேட்பாளர்யோகேஸ்வரனுக்கு வாக்களித்திருந்த நிலையில் அவர் 11வாக்குகளைப் பெற்றுஉபதவிசாளராக தெரிவாகியிருந்தார்.
அதேநேரம் சாவகச்சேரி பிரதேசசபையின் சைக்கிள் கட்சி உறுப்பினர் ஒருவர்நீதிமன்ற இடைக்கால தடையுத்தரவு காரணமாக தவிசாளர் தெரிவுக்குசமுகமளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சாவகச்சேரி பிரதேசசபையில் வீடு-08,சைக்கிள்-07,தேசிய மக்கள்சக்தி-06,சங்கு-05 ஈ.பி.டிபி-01 மற்றும் மான் ஒரு ஆசனங்களைப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.