வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையிலான குழுவினருக்கும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தலைமையிலானகுழுவினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று(ஜூன் 25) மாலை நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜாமுருகேசன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன், மன்னார் மாவட்டச் செயலர் க.கனகேஸ்வரன், கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன், முல்லைத்தீவு மாவட்டச் செயலர்அ.உமாமகேஸ்வரன் ஆகியோரும், ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி தலைமையிலான குழுவினரும் பங்குபற்றினர். அத்துடன்வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்தக் கலந்துரையாடல் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் ஊடகங்களுக்குத்தெரிவித்ததாவது,
மீள்குடியமர்வு – காணி விடுவிப்புத் தொடர்பில் தற்போதைய நிலைமைகளைஆணையாளர் கேட்டதுடன் மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என அரசாங்கம்தெரிவித்துள்ளது. அதற்கு அமைவாக படிப்படியாக காணிகள்விடுவிக்கப்படுகின்றன. இன்னமும் காணிகள் விடுவிக்கப்படவேண்டியுள்ளனஎன்று சுட்டிக்காட்டினோம்.
மேலும், வனவளத் திணைக்களம், வனஉயிரிகள் திணைக்களம் என்பனஇங்குள்ள அதிகாரிகளுக்குத் தெரியாமல் காணிகளை சுவீகரித்துள்ளன. இதனால் மக்களின் வாழ்விடங்கள் மற்றும் விவசாயக் காணிகள் என்பனஇழக்கப்பட்டுள்ளன. தற்போதைய அரசாங்கம் மாவட்ட ரீதியிலான குழுக்களைஅமைத்து இதனைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது என்பதைஆணையாளருக்கு தெரியப்படுத்தினேன்.
காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானிதொடர்பிலும் ஆணையாளரும், ஐ.நா.வின் வதிவிடப் பிரதிநிதியும்விடயங்களைக் கேட்டறிந்து கொண்டனர். அந்தப் பொறிமுறை சரியானதுஎன்றும், ஆனால் மக்களுக்கு போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்எனவும் மாவட்டச் செயலர்கள் இதன்போது ஆணையாளருக்கு சுட்டிக்காட்டினர்.
மேலும், ஆணையாளர் இராணுவப் பிரசன்னம் மற்றும் மக்களின் காணிகளில்இராணுவத்தினர் விவசாயம் மேற்கொள்வது வர்த்தக நடவடிக்கைகளைமுன்னெடுப்பது தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.
முன்னைய காலங்களுடன் ஒப்பிடுகையில் அந்த நடவடிக்கைகள்குறைந்துள்ளன என்றும் இன்னமும் சில பிரச்சினைகள் அதில் உள்ளன எனவும்ஆணையாளருக்கு சுட்டிக்காட்டினேன்.
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பிலும் ஆணையாளர் கரிசனையைவெளிப்படுத்தினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் தீர்வுகிடைக்கப்பெறவில்லை என்பதைக் குறிப்பிட்டேன். அத்துடன் கடந்தகாலங்களிலிருந்த அரசாங்கங்கள் வெளிப்படுத்திய வேறுபாடுகள் இந்தஅரசாங்கத்திடம் இல்லை என்பதையும், அது முற்போக்கானது என்பதையும்ஆணையாளருக்கு தெளிவுபடுத்தினேன்.
போதைப்பொருள் பயன்பாடு மற்றும் அதற்குரிய புனர்வாழ்வு நிலையம் என்பனதொடர்பிலும் ஆணையாளர் கேள்வி எழுப்பினார். போதைப்பொருள்பாவனையாளர்களுக்கான புனர்வாழ்வு நிலையம் இன்னமும் யாழ்ப்பாணத்தில்அமைக்கப்படவில்லை என்பதையும், விரைவில் அதை அமைப்பதற்கானநடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது என்கின்ற விடயத்தையும்ஆணையாளருக்கு தெரியப்படுத்தினேன். அந்தப் புனர்வாழ்வு நிலையங்கள்யாரால் இயக்கப்படும் என்கின்ற விடயங்கள் தொடர்பிலும் அவர் கேட்டறிந்துகொண்டார்.
இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகள் தொடர்பாகவும் ஆணையாளர் தனதுகவனத்தைச் செலுத்தியிருந்தார். இந்தியாவிலிருந்து திரும்பி வரும் மக்களுக்குஉரிய உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பதையும், அவ்வாறு செய்தால்மாத்திரமே அவர்களைத் தொடர்ச்சியாக இங்கே அழைக்க முடியும் என்றவிடயத்தையும் ஆணையாளருக்கு சுட்டிக்காட்டினேன். மேலும், வடக்கில்அமைக்கப்படவுள்ள முதலீட்டு வலயங்கள் தொடர்பிலும் என்னாலும், மாவட்டச்செயலர்களாலும் ஆணையாளருக்கு தெரியப்படுத்தப்பட்டது, என ஆளுநர்தெரிவித்தார்.