இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் இன்றையதினம் செம்மணியில் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு சென்றவேளை அங்கிருந்த போராட்டக்காரர்களால் விரட்டியடிக்கப்பட்டார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி அணையா விளக்குபோராட்டமானது கடந்த 23ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில் இன்றுநிறைவுக்குவந்தது.
குறித்த போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு இலங்கை தமிழரசு கட்சியின் பதில்தலைவர் சி.வி.கே.சிவஞானம் சென்றவேளை அங்கு போராட்டத்தில் ஈடுபட்டபோராட்டக்காரர்கள் கூச்சலிட்டு அந்தப் பகுதியில் இருந்து அவரைவிரட்டியடித்தனர்.
யாழ்ப்பாணம் செம்மணியில் போராட்ட களத்தில் இருந்து போராட்டத்தில்ஈடுபட்டவர்களால் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்றஉறுப்பினர் றஜீவன் ஜெயசந்திரமூர்த்ர்தி ஆகியோரும் விரட்டியடிக்கபட்டனர்.
இன்று மதியம் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி ஆகியோர் செம்மணி போராட்ட திடலுக்குசென்றனர்.இதன் பொழுது போராட்டகாரர்களால் அமைச்சர் இராமலிங்கம்சந்திரசேகர் போத்தல்களால் எறியப்பட்டு விரட்டியடிக்கபட்டார்.மேலும் அவரதுவாகனத்தின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது.