By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகர் காலமானார்; அவரின் தகனம் ஞாயிற்றுக்கிழமை வேலணையில் நடைபெறும்!
Share
Notification
Latest News
செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
யாழ்ப்பாணம்
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!
யாழ்ப்பாணம்
நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!
தீவகச் செய்தி
யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > தீவகச் செய்தி > தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகர் காலமானார்; அவரின் தகனம் ஞாயிற்றுக்கிழமை வேலணையில் நடைபெறும்!
தீவகச் செய்தி

தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகர் காலமானார்; அவரின் தகனம் ஞாயிற்றுக்கிழமை வேலணையில் நடைபெறும்!

Last updated: 2025/02/21 at 9:35 PM
Published February 21, 2025 193 Views
Share
2 Min Read
SHARE

தினக்குரல் பத்திரிகையின் நிறுவுநரும், நோர்தேன் சென்றல் வைத்தியசாலையின் நிறுவுநரும், தலைவருமான எஸ்.பி. சாமி (செல்லையா பொன்னுசாமி) அவர்கள்,  புதன்கிழமை (பெப் 19) மாலை தனது 89 ஆவது வயதில் காலமானார்.

Contents
இவர் பற்றிய சுருக்கம்ஊடக மற்றும் சமூக சேவையில் இவரின் பங்குஇறுதி அஞ்சலி மற்றும் தகனம்

இவர் பற்றிய சுருக்கம்

சமூக சேவகராகப் போற்றப்பட்ட செல்லையா பொன்னுசாமி அவர்கள் 1936 ஆம் ஆண்டு தை மாதம் 1ஆம் திகதி, தீவகம் வேலணையில் பிறந்தார்.

கொழும்பில் நீண்ட காலம் வசித்த அவர், அத்தியாவசிய பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி சங்கத்தின் தலைவராகவும்மற்றும் கொழும்பு புறக்கோட்டை வர்த்தக சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

1978 ஆம் ஆண்டு, யாழ்ப்பாணத்தில் சென்றல் நேசிங் ஹோம் தனியார் வைத்தியசாலையை நிறுவிய அவர், அதன் தரத்தை உயர்த்தி நோர்தேன் சென்றல் வைத்தியசாலையாக மாற்றி, இறுதிவரை அதன் தலைவராக செயல்பட்டார்.

ஊடக மற்றும் சமூக சேவையில் இவரின் பங்கு

தமிழ் இனத்திற்காக பாடுபட்ட சமூக போராளியான செல்லையா பொன்னுசாமி, தமிழ் மக்களின் துயரங்களை வெளிப்படுத்த 1997 ஆம் ஆண்டு தனது அனுபவங்களை ஒன்றாக சேர்த்து தினக்குரல் பத்திரிகையை நிறுவினார். இதன் மூலம் தமிழ் பத்திரிகை வரலாற்றில் அவர் மறக்க முடியாத முத்திரையை பதித்தார்.

தமிழர் துயரங்களை வெளிக்கொணர கொழும்பில் வெளிவந்த தினக்குரல் பத்திரிகையை, வடக்கு-கிழக்கு மக்களுக்கு அருகாக இருக்க யாழ் தினக்குரல் என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் தொடங்கினார்.

இறுதி யுத்தத்தின் கொடுமைகளை நேரில் பார்த்து, பாதிக்கப்பட்ட மக்களை ஆதரிக்க சமய, சமூக அமைப்புகளுடன் இணைந்து பல நடவடிக்கைகளை முன்னெடுத்தார். போருக்குப் பின்னர் மீள்குடியேறிய மக்களின் பிரச்சினைகளை பத்திரிகை ஊடாக வெளிப்படுத்துவதில் அவர் அக்கறை செலுத்தினார்.

தினக்குரல் பத்திரிகை மற்றும் கருணைப்பாலம் அமைப்பின் மூலம், வன்னியில் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல உதவிகளை செய்தார்.

மேலும், தீவகத்திலும் யாழ்ப்பாண மாவட்டத்திலும் பல்வேறு பாடசாலைகளின் பௌதீக வள அபிவிருத்திக்காகஉதவியுள்ளார்.

இறுதி அஞ்சலி மற்றும் தகனம்

அன்னாரின் உடல் இன்று (பெப்ரவரி 21, வெள்ளிக்கிழமை) மாலை 04.00 மணிக்கு, யாழ்ப்பாணம், நல்லூர் செட்டித்தெருவிலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

இறுதி கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறும். காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை அஞ்சலி உரைகள் நிகழ்த்தப்படவுள்ளன. பின்னர், தகனத்திற்காக அவரது உடல் வேலணை சாட்டி இந்து மயானத்திற்குஎடுத்துச் செல்லப்படும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

You Might Also Like

நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!

வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.

வேலணையில் மாணவர்களுக்கு கல்விசார் உபகரணம் வழங்கும் நிகழ்வு!

நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!

நயினாதீவில் சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு !

வேலணை பிரதேச சபைத் தவிசாளராக சிவலிங்கம் அசோக்குமார் தெரிவு!

ஊர்காவற்றுறை பிரதேச சபைத் தவிசாளராக அன்னலிங்கம் அன்னராசா தெரிவு!

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவத்தையொட்டி அரை மணிநேரத்துக்கு ஒரு சேவை!

SUB EDITOR February 21, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article குறிகாட்டுவான் இறங்குதுறை திருத்தம் -அமைச்சர் இ.சந்திரசேகரன் உறுதி!
Next Article அர்ச்சுனா பா. உ. க்கு எதிராக விசாரணை !!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!
நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!

You Might Also Like

தீவகச் செய்தி

நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!

June 25, 2025
தீவகச் செய்தி

வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.

June 24, 2025
தீவகச் செய்தி

வேலணையில் மாணவர்களுக்கு கல்விசார் உபகரணம் வழங்கும் நிகழ்வு!

June 24, 2025
தீவகச் செய்தி

நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!

June 23, 2025
தீவகச் செய்தி

நயினாதீவில் சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு !

June 20, 2025
தீவகச் செய்தி

வேலணை பிரதேச சபைத் தவிசாளராக சிவலிங்கம் அசோக்குமார் தெரிவு!

June 20, 2025
தீவகச் செய்தி

ஊர்காவற்றுறை பிரதேச சபைத் தவிசாளராக அன்னலிங்கம் அன்னராசா தெரிவு!

June 20, 2025
தீவகச் செய்தி

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவத்தையொட்டி அரை மணிநேரத்துக்கு ஒரு சேவை!

June 20, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?