வடக்கில் உள்ள 10 பொலிஸ் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தவுள்ளதாககாங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு அனாமதேய தொலைபேசிஅழைப்பொன்று வந்துள்ளது.
குறித்த தொலைபேசி அழைப்பு கடந்த ஜூன் 11 மதியம் 1.15 மணி முதல் 1.20 மணியளவில் வந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் வடக்கில்உள்ள பொலிஸ் நிலையங்களில் பாதுகாப்பு குறித்து மேலதிக அவதானம்செலுத்தி வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.