By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: தமிழருக்கு தீர்வு சந்தேகமே? -உலக தமிழர் பேரவையினரிடம் ஆறு திருமுருகன் தெரிவிப்பு!
Share
Notification
Latest News
யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
யாழ்ப்பாணம்
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வன்னிச் செய்திகள்
வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
தீவகச் செய்தி
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!
நெடுந்தீவு
ஈரான் – இஸ்ரோல் இடையே போர் நிறுத்தம் !
உலகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > தமிழருக்கு தீர்வு சந்தேகமே? -உலக தமிழர் பேரவையினரிடம் ஆறு திருமுருகன் தெரிவிப்பு!
யாழ்ப்பாணம்

தமிழருக்கு தீர்வு சந்தேகமே? -உலக தமிழர் பேரவையினரிடம் ஆறு திருமுருகன் தெரிவிப்பு!

Last updated: 2023/12/10 at 12:24 PM
Published December 10, 2023 406 Views
Share
2 Min Read
SHARE

தமிழரின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. ஏனென்றால், சாதாரணமாக இந்துக்களின் பிரச்சினைக்கு கூட தீர்வு கிடைக்காத நிலையில், தமிழர்களுக்கு எவ்வாறு தீர்வு கிடைக்கும் என நம்பமுடியும் என்று தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவரும் நல்லை ஆதீனத்தின் செயலாளருமான கலாநிதி ஆறுதிருமுருகன் தெரிவித்தார்.

நேற்று(டிசம்பர் 9) உலகத் தமிழர் பேரவையினர் நல்லை ஆதீன முதல்வரை சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உலக தமிழர் பேரவையினரை சந்தித்தபோது ஆறு திருமுருகன் மேலும் கூறியதாவது, இன்று நீங்கள் எல்லோருமாக இங்கே வந்திருக்கிறீர்கள். நீங்கள் யார் என்று எங்களுக்கு தெரியவில்லை. உங்களைப் போல் பலர் இங்கே வருகை தந்து சந்திக்கிறார்கள். பின்பு போய்விடுவார்கள்.  ஆனால், எந்த முடிவோ எந்த தீர்வுமோ எட்டப்படுவதில்லை.

குறிப்பாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  அவர்கள் கூட நீங்கள் இருக்கும் கதிரையில் இருந்து என்னிடம் பல பிரச்சினைகளை கேட்டறிந்தார். நாங்களும் பல விடயங்களை கூறினோம். அவ்வாறே போய்விட்டார். எந்த தீர்வும் கிடைக்கவில்லை.

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் திருப்பணி வேலைகளை செய்ய முடியாதுள்ளது. அங்கே பல இடர்ப்பாடுகள் தொல்பொருள் திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்படுகிறது.

அதேபோல காங்கேசன்துறை பகுதியை எடுத்துக்கொண்டால், எங்களுடைய சித்தர்கள் இருந்த இடங்கள், சமாதிகளை இடித்து, புராதன கோவில்களை இடித்து, ஜனாதிபதி மாளிகையினை கட்டிவிட்டு, இன்று அந்த இடத்தை வேறு யாருக்கோ விற்க முற்படுகிறார்கள். இதெல்லாம் பிழையான விடயம்தானே. ஏனென்றால், முதலில் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்போதுதான் எமக்கு ஒரு நம்பிக்கை வரும்.

தமிழ் மக்களுக்கு தீர்வினை பெற்றுத் தருவீர்கள் என்று இந்த விடயத்தை உடனடியாக கருத்தில் எடுத்து, இதனை செயல்படுத்த நீங்கள் முன்வாருங்கள், பார்ப்போம்.

அதேபோல இந்த பிரச்சினை தொடர்பில் அஸ்திரிய பீடத்தினர் கூட இங்கே வருகை தந்து ஆதினத்தை சந்தித்தபோது பல விடயங்களை எடுத்துரைத்தோம். ஆனால், அவை காற்றில் போய்விட்டன.

அதேபோல நீங்களும் போகக்கூடாது. நீங்களும் இந்த விடயங்களை கருத்தில் கொண்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

You Might Also Like

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த சுவாமிநாத ஐயர் பலி!

வழுக்கையாற்று புனரமைப்பிற்கான பல்கலைக்கழக மாணவர் ஆய்வு ஆரம்பம் – நிலத்தடி நீர், விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி

Anarkali December 10, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article பறிபோகும் அபாயத்தில் நந்திக்கடல்!- மக்கள் குற்றச்சாட்டு!
Next Article பிரபாகரனை சந்திக்க மல்வத்து பீட மகாநாயக்க தேரர் பல தடவை முயற்சி!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

You Might Also Like

யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!

June 24, 2025
யாழ்ப்பாணம்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

June 23, 2025
யாழ்ப்பாணம்

சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!

June 23, 2025
யாழ்ப்பாணம்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

June 22, 2025
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

June 22, 2025
யாழ்ப்பாணம்

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

June 21, 2025
யாழ்ப்பாணம்

ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த சுவாமிநாத ஐயர் பலி!

June 21, 2025
யாழ்ப்பாணம்

வழுக்கையாற்று புனரமைப்பிற்கான பல்கலைக்கழக மாணவர் ஆய்வு ஆரம்பம் – நிலத்தடி நீர், விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி

June 21, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?