தமிழக மீனவர்கள் கைது!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

எட்டு தமிழக மீனவர்கள் காரைநகரில் கைது!

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட எட்டு தமிழக மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு – ஜெகதாப்பட்டினத்தில் இருந்து நேற்று எட்டு மீனவர்களுடன் புறப்பட்ட மீன்பிடிப் படகே காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட வேளை கடற்படையினரிடம் இன்று சிக்கியது.

படகுடன் கைதுசெய்யப்பட்ட எட்டு மீனவர்களும் மயிலிட்டித் துறைமுகத்துக்குக் கொண்டு வரப்பட்டு யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் ஊர்காவற்றுறைநீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது எதிர்வரும் நான்காம் திகதிவரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Share this Article