By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: தன்னார்வ குருதிக் கொடையாளர்களுக்கு யாழ்.போதனா அவசர கோரிக்கை!
Share
Notification
Latest News
இலஞ்சம் பெற்ற தரகர் கைது!
இலங்கைச் செய்தி
விளக்கமறியலில் முன்னாள் கடற்படைத் தளபதி
இலங்கைச் செய்தி
நாமல் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!
இலங்கைச் செய்தி
மாகாணசபை தேர்தலை நடத்துங்கள் – பவ்ரல் !
இலங்கைச் செய்தி
நெடுந்தீவு மெலிஞ்சியம்பதி காளி அம்பாளின் ஆடிப்பூர விழா!
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > தன்னார்வ குருதிக் கொடையாளர்களுக்கு யாழ்.போதனா அவசர கோரிக்கை!
யாழ்ப்பாணம்

தன்னார்வ குருதிக் கொடையாளர்களுக்கு யாழ்.போதனா அவசர கோரிக்கை!

Last updated: 2023/10/27 at 8:14 PM
Published October 27, 2023 458 Views
Share
2 Min Read
SHARE

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் அனைத்து வகையான குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் குருதி கையிருப்பானது ஆபத்தான நிலையில் காணப்படுவதனால் தன்னார்வ குருதிக் கொடையாளர்கள் இரத்ததானம் செய்வதற்கு முன்வருமாறு அவசர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கள், சத்திரசிகிச்சைகள், குருதிச்சோகை நோயாளர்கள், புற்றுநோயாளர்கள் மற்றும் குருதி தேவைப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வைத்தியசாலையில் அதிகரித்து செல்கின்றதனால் இரத்த வங்கியால் விநியோகிக்கப்படுகின்ற குருதியின் அளவும் கூடிக் கொண்டே செல்கின்றதாக இரத்த வங்கியினர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், இந்த குருதி தேவை அதிகரிப்பிற்கு ஏற்ப குருதிக் கொடையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. இதனால் இரத்த வங்கியில் எல்லா வகை குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

நாம் பல இடங்களுக்குச் சென்று குருதியைச் சேகரித்து வருகின்றோம். குறிப்பாக தற்போதைய அவசர நிலையில் வடக்கு மாகாணத்திற்கு வெளியே உள்ள பகுதிகளுக்கும் சென்று குருதியை சேகரித்து வருகின்றோம்.

இருந்தபோதிலும் சேகரிக்கப்படும் குருதியின் அளவை காட்டிலும் பயன்பாட்டிற்கு தேவைப்படும் குருதியின் அளவு அதிகரித்து காணப்படுவதனால் குறிப்பிட்ட சில காலங்களில் குருதியின் கையிருப்பு குறைந்தளவிலேயே காணப்படுகின்றது.

எமது இரத்த வங்கியில் 330 பைந்த் குருதி குறையாமல் இருக்க வேண்டும். அனால் தற்போது இருக்கும் குருதியின் அளவு 238 பைந்த் ஆகும். இது ஆபத்தான நிலையாகும்.

இதனால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை எம்மால் வழங்க முடியாமலுள்ளது. ஒரு அனர்த்தம் நிகழுமாயின் அதனால் ஏற்படும் குருதியிழப்பை ஈடுசெய்வதற்கு எம்மால் முடியாமல் போகலாம். அவ்வாறான நிலை ஏற்படுமாயின் பாரிய நெருக்கடியை நாமும் எமது சமூகமும் எதிர்நோக்க வேண்டியேற்படுவது தவிர்க்கவியலாததாகிவிடும்.

ஆகவே இந்த நிலைமையை கவனத்தில் கொண்டு தன்னார்வ குருதிக் கொடையாளர்கள் இரத்ததானம் செய்வதற்கு முன்வருமாறு அவசர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்திற்குட்பட்ட பகுதிகளில் குறைந்தது 30 கொடையாளர்களை ஒருங்கிணைத்து குருதிக் கொடை முகாம்களை ஏற்பாடு செய்யும் பட்சத்தில் யாழ் போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவினால் நேரடியாக வருகைதந்து குருதிகளை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தன்னார்வ குருதிக் கொடை முகாம்களை ஒழுங்கு செய்யும் தரப்பினர் மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள 0772105375 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

You Might Also Like

தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் போராளி உயிரிழப்பு

மனித புதைகுழியிலிருந்து இதுவரை 101 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்

சென். பற்றிக்ஸ் கல்லூரியின் 175 ஆவது ஆண்டு நிறைவு – ஞாபகார்த்தமுத்திரை வெளியீடு.

புதைகுழியில் குழந்தையின் பால் போச்சி 08 எலும்பு கூட்டு தொகுதிகள்அடையாளம்!!

விடுதலை நீர் சேகரிப்பு ஊர்தி இன்றுமுதல்!

செம்மணி மனித புதைகுழியில் மேலும் 7 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு

கோல் கம்பம் வீழ்ந்து உயிரிழப்பு !

பனையில் 25 அடி உயரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!

Anarkali October 27, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்களுக்கு சீல்!
Next Article கிளிநொச்சி ஊடாக பயணிக்கும் கனரக வாகனங்களுக்கு நேரக் கட்டுப்பாடு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

இலஞ்சம் பெற்ற தரகர் கைது!
விளக்கமறியலில் முன்னாள் கடற்படைத் தளபதி
நாமல் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!
மாகாணசபை தேர்தலை நடத்துங்கள் – பவ்ரல் !

You Might Also Like

யாழ்ப்பாணம்

தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் போராளி உயிரிழப்பு

July 28, 2025
யாழ்ப்பாணம்

மனித புதைகுழியிலிருந்து இதுவரை 101 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்

July 27, 2025
யாழ்ப்பாணம்

சென். பற்றிக்ஸ் கல்லூரியின் 175 ஆவது ஆண்டு நிறைவு – ஞாபகார்த்தமுத்திரை வெளியீடு.

July 27, 2025
யாழ்ப்பாணம்

புதைகுழியில் குழந்தையின் பால் போச்சி 08 எலும்பு கூட்டு தொகுதிகள்அடையாளம்!!

July 22, 2025
யாழ்ப்பாணம்

விடுதலை நீர் சேகரிப்பு ஊர்தி இன்றுமுதல்!

July 22, 2025
யாழ்ப்பாணம்

செம்மணி மனித புதைகுழியில் மேலும் 7 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு

July 22, 2025
யாழ்ப்பாணம்

கோல் கம்பம் வீழ்ந்து உயிரிழப்பு !

July 21, 2025
யாழ்ப்பாணம்

பனையில் 25 அடி உயரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!

July 21, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?