By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: ஜனாதிபதி – அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு நாளை!
Share
Notification
Latest News
சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!
யாழ்ப்பாணம்
நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!
நெடுந்தீவு
கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !
நெடுந்தீவு
“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !
நெடுந்தீவு
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > ஜனாதிபதி – அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு நாளை!
இலங்கைச் செய்தி

ஜனாதிபதி – அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு நாளை!

Last updated: 2023/07/25 at 11:19 PM
Published July 25, 2023 326 Views
Share
1 Min Read
SHARE

ஜனாதிபதிக்கும் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் நாளை(ஜூலை 26) நடைபெறவுள்ள சந்திப்பில் 13 ஆவது திருத்த அமுலாக்கம் மற்றும் நல்லிணக்கம் என்பன தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடந்தவார இந்திய விஜயத்தின்போது அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும், தமிழ்மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுமாறும் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியினால் ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்பட்டது.

இருப்பினும் அதற்கு முன்னர் இடம்பெற்ற வட, கிழக்கு மாகாணங்களின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான யோசனை ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டது. அந்த யோசனையை சில கட்சிகள் ஏற்றுக்கொண்டிருந்த போதிலும், இலங்கைத் தமிழரசுக்கட்சி அதனை முற்றாக நிராகரித்திருந்தது.

இந்நிலையில் ஜனாதிபதியின் இந்திய விஜயம் மற்றும் இந்தியப்பிரதமரின் வலியுறுத்தல் தொடர்பில் கடந்த சனிக்கிழமை தெளிவுபடுத்திய வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ‘பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் அரசாங்கத்தினால் தனித்துத் தீர்மானிக்கமுடியாது.

எனவே இதுகுறித்து கட்சித்தலைவர்களுடன் கலந்தாலோசித்ததன் பின்னர் இலங்கை இறுதித்தீர்மானத்தை அறிவிக்கும் என்றும், அது தவிர்ந்த 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தமுடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளினதும் தலைவர்களுடனான சந்திப்புக்கு ஜனாதிபதி அழைப்புவிடுத்துள்ளார்.

நாளை (ஜூலை 26) மாலை 5.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவிருக்கும் இச்சந்திப்பில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த அமுலாக்கம் மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பல் ஆகிய விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இச்சந்திப்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தவிர்ந்த ஏனைய வட, கிழக்கு தமிழ்த்தேசிய கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்வர்.

அதேவேளை இச்சந்திப்பைப் பிற்போடுமாறு பிரதான எதிரணியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரியதாக அறியமுடிகின்றது. இருப்பினும் இச்சந்திப்பில் தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் தலைவர்களும், முக்கியஸ்த்தர்களும் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

கெஹலிய குடும்பமே கைது !

Anarkali July 25, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article குறும்படப்போட்டியில் முதலிடத்தை பிடித்த “கேளன்” குறும்படம்!
Next Article தமிழர் போராட்டத்தை சர்வதேச விவகாரமாக அங்கீகரியுங்கள்!- ஈழத்தமிழர் பேரவை வலியுறுத்தல்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!
நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!
கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !
“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

You Might Also Like

இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

June 20, 2025
இலங்கைச் செய்தி

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

June 19, 2025
இலங்கைச் செய்தி

கெஹலிய குடும்பமே கைது !

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?