தமிழ் மக்கள் பலரது உடலங்களை தாங்கிய மனிதப் புதைகுழிகள் தமிழர்தாயகமெங்கும் அதிகரித்து செல்கின்ற நிலையில் தீர்வுகள் எதுவும் இதுவரைகிடையாத நிலையில் குறித்த விடையத்தை சர்வதேச பார்வைக்கு கொண்டுசெல்வதுடன் அதனூடாக உறவுகளுக்கு நீதி கிடைக்க வலியுதுத்தும் வகையில்மக்கள் மயப்படுத்தப்பட்ட வகையில் இந்த ‘அணையா தீபம்’ போராட்டம் இன்று(ஜூன் 23) செம்மணியில் ஆரம்பிக்கப்பட்டது.
செம்மணியில் 1996 களில் சருகாகிப் போன கிருசாந்தியின் உறவினரால் அணையாதீபம் சுடரேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் சட்டத்தரணி வைஸ்ணவிசண்முகனாதன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த போராட்டத்தில்சமயத் தலைவர்கள்,அரசியல் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுஅமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தனர்.
செம்மணி மண்ணில் புதையுண்டுபோன உறவுகளுக்கு, நீதி வேண்டியபோராட்டமாக ‘அணையா தீபம்’ என்ற பெயரில் குறித்த போராட்டம்முன்னெடுக்கப்படுகின்றது.
இன்று காலை 10.10 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டமானதுஜூன் 24,25 தினங்களிலும் அகிம்சை வழியில் முன்னெடுக்கப்படவுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியை வேண்டி சர்வதேசத்தின்கவனத்தை ஈர்க்கும் வகையில் இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
யாழ். வருகைதரவுள்ள ஐ.நா உயர் அதிகாரியின் பார்வைக்கு பிரச்சினையின்ஆழத்தை வலியுறுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் இந்த போராட்டத்திற்குதமிழ் மக்கள், பொது அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டுபோராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டும் என சட்டத்ததணி வைஸ்ணவிசண்முகனாதன் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.