By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: சுதேச மருத்துவர்களை உடன் சேவையில் உள்ளீர்க்குமாறு சித்த மருத்துவர்சங்கம் கோரிக்கை!
Share
Notification
Latest News
யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
யாழ்ப்பாணம்
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வன்னிச் செய்திகள்
வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
தீவகச் செய்தி
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!
நெடுந்தீவு
ஈரான் – இஸ்ரோல் இடையே போர் நிறுத்தம் !
உலகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > சுதேச மருத்துவர்களை உடன் சேவையில் உள்ளீர்க்குமாறு சித்த மருத்துவர்சங்கம் கோரிக்கை!
இலங்கைச் செய்தி

சுதேச மருத்துவர்களை உடன் சேவையில் உள்ளீர்க்குமாறு சித்த மருத்துவர்சங்கம் கோரிக்கை!

Last updated: 2025/03/23 at 4:10 PM
Published March 23, 2025 150 Views
Share
3 Min Read
SHARE

எதிர்வரும் காலங்களில் வெளியாகவுள்ள புதிய  மருத்துவர்களை குடும்பமருத்துவர்களாக நியமிக்க அரசு தயாராகி வரும் நிலையில் 1,689 அரசவேலையற்ற சித்த, ஆயுர்வேத மற்றும் யுனானி மருத்துவர்கள் சுகாதார அமைப்பில்பணியாற்றுவதற்கான வாய்ப்புக்காக 7 ஆண்டுகளுக்கும் மேலாககாத்திருக்கின்றனர். இவ்வாறு 7 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் அரசவேலையற்ற சித்த மருத்துவர்களை  உடன் சேவைக்குள் உள்ளீர்க்க அரசாங்கம்நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரச வேலையற்ற சித்த மருத்துவர் சங்கம்கோரிக்கை விடுத்துள்ளது.

அரச வேலையற்ற சித்த மருத்துவர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கையில்தெரிவிக்கப்பட்டிருப்பதாவது

MBBS  வைத்தியர்களைப் போல் பட்டப்படிப்பு மற்றும் உள்ளகப் பயிற்சியைமுடித்துவிட்டு, இலங்கை மக்களுக்குச் சேவை செய்யத் தயாராக இருக்கிறோம்.  மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நிபுணர்களாக சுகாதார சேவைக்கு பங்களிக்கும்  அதே வாய்ப்பையே நாங்கள் கேட்கிறோம்.

சுகாதார அமைச்சு, ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம், பொது சேவைஆணைக்குழு, நிதி அமைச்சகம் மற்றும் அமைச்சர்களின் அமைச்சரவைஅலுவலகம் ஆகிய உயர்நிலை அதிகாரிகளை சந்தித்து எமது கோரிக்கைகளை  சமர்ப்பித்துள்ளோம்.

எங்கள் சேவைகள் நாட்டின் வருவாயை அதிகரிக்க உதவும்.

நாங்கள் தொடர்ந்து பின்தங்கியே இருக்கிறோம்.

யாராவது எங்கள் கோரிக்கைகளை படித்தார்களா?  மற்ற நியமனங்கள்செய்யப்படும்போது எங்கள் பரிந்துரைகள் புறக்கணிக்கப்படுகிறதா?   என்பதைவிரக்தியுடன் கேட்டுக்கொள்கிறோம் சுதேச மருத்துவர்களாகிய  நாங்களும்நியாயமாக நடத்தப்படுவதற்கும், அதேபோன்று சேவை செய்வதற்கானவாய்ப்புகளை பெறுவதற்கும்  தகுதியானவர்கள்.

எமக்கான நியாயத்தையே  நாம் கேட்கிறோம்.  இலங்கையின் சுகாதார  முறையை மேம்படுத்த நாமும் உதவலாம். எங்கள் தகுதிகள் மற்றும் திறமைகள்வீணாகிவிடக்கூடாது.

நாங்கள் தகுதியானவர்கள், திறமையானவர்கள். நாம் சேவை செய்யத் தயாராகஇருக்கிறோம் என்பதை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டிய நேரம் இது.

எங்கள் MBBS சகாக்களுக்கு இருக்கும் அதே வாய்ப்பையே  நாங்கள்கேட்கிறோம்.

எங்களுக்கான நியாயத்தை வழங்குங்கள். நாங்கள் சேவை செய்ய தயாராகஇருக்கிறோம் என  அரச வேலையற்ற சித்த மருத்துவ சங்க செயலாளர்தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த வாரம் நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து  சுகாதாரஅமைச்சில்   இச் சங்கம் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தது.

இதன் போது

01. ஏற்கனவே உள்ளகப் பயிற்சியை முடித்த 1,689 ஆயுர்வேதம், சித்த மற்றும்யுனானி வேலையற்ற மருத்துவர்களுக்கு உடனடி நியமனங்களை வழங்கவேண்டும்

02. தற்போது உள்ளகப்பயிற்சி பெற்று வரும் 374 உள்ளக மருத்துவஅலுவலர்களுக்கு அவர்களின் பயிற்சி முடிந்தவுடன் உடனடி நியமனங்களைவழங்க வேண்டும்

03. எதிர்வரும் ஆண்டுகளில் இன்டர்ன்ஷிப் எனப்படும் உள்ளகப் பயிற்சியைமுடித்தவுடனேயை உடனடி நியமனங்களை வழங்க வேண்டும்

04. நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப சுதேச மருத்துவர் எண்ணிக்கையையும்சமூகநல மருத்துவர் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும்

போன்ற கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டிருந்த போதிலும்

304 குறைநிரப்பு நியமனங்களை முதற்கட்டமாக வழங்க தாம் ஏற்கனவேதீர்மானித்துவிட்டதாகவும் மீதமாகவுள்ள 1385 சுதேச மருத்துவ  நியமனங்களைவழங்க நிதிநிலைமைகள் தடையாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தஅதேவேளையில் குடும்ப மருத்துவர் என்ற கருத்தை நாட்டிற்கு அறிமுகப்படுத்தசுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளமை மற்றும் இந்த வருட வரவு செலவுத்திட்டத்தில் அதற்கான பணம் ஒதுக்கப்பட்டுள்ள விடயத்தை சுகாதார மற்றும்வெகுசன ஊடக பிரதி அமைச்சர் ஹங்சக விஜேமுணி தெரிவித்துள்ளமையானது  வேலையற்ற சுதேச மருத்துவர்களாகிய எம்மை அரசாங்கம் திட்டமிடப்பட்டுபுறக்கணிக்கின்றதோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக குறித்தசங்கத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர்

You Might Also Like

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

SUB EDITOR March 23, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article ஊர்காவற்றுறையில் டீசலை அருந்திய 9 மாதக் குழந்தை பலி!!
Next Article காரைநகர் பொன்னாலைப் பாலத்தில் ஒரு முச்சக்கர வண்டி விபத்துக்கு உள்ளானது.
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

You Might Also Like

இலங்கைச் செய்தி

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

June 23, 2025
இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

June 20, 2025
இலங்கைச் செய்தி

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?