சிவபுரம் குத்துப்பாலத்தை அமைக்குமாறு கோரிக்கைவிடுத்த ரவிகரன் எம்.பி!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மாந்தைகிழக்கு பிரதேசசெயலர் பிரிவிலுள்ள சிவபுரம், குத்துப்பாலத்தினை அமைக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபாலவிடம் கோரிக்கைவிடுத்திருந்தார்.

இந்நிலையில் குறித்த சிவபுரம் குத்துப் பாலத்தினை அமைப்பதற்கு 500மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜயபால தகவல் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தம் தொடர்பான விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திலேயே இவ்விடயம்தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

இதுதொடர்பில்  நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,

வவுனிக்குளத்தின் கீழ்வரும் சிவபுரம் குத்துப் பாலம் நிர்மாணிக்கப்படவேண்டும்.

வெள்ள அனர்த்தம் ஏற்படும்போது இந்த சிவபுரம் குத்துப் பாலத்தினூடான வீதிப்போக்குவரத்து முற்றாகத் தடைப்படும். இதனால் மாந்தைகிழக்கு தனித் தீவாக மாறுகின்ற நிலமை ஏற்படுகின்றது.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டமாகக் காணப்படுகின்றது. அத்தகைய முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பிரதேசமாக மாந்தைகிழக்குப் பிரதேசம் காணப்படுகின்றது.

எனவே இந்த நிலைமைகளைக் கருத்திற்கொண்டு தற்போது ஆற்றுச்சருக்கையாக காணப்படும் சிவபுரம் குத்துப்பாலத்தினை, மழைக்காலத்திலும் போக்குவரத்து தடைப்படாத வகையில் இருக்க அப்பாலத்தை பாரிய பாலமாக அமைப்பதற்கு  நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.

Share this Article