முன்னாள் பிரதி அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) அலுவலகம் குற்றத் தடுப்பு புலனாய்வு மற்றும் விசேட அதிரடிப் படையினரால்சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிள்ளையானின் குறித்த அலுவலகத்தில் விசேட சோதனைநடவடிக்கைகள் இன்று(மே30) காலை 7 மணி முதல் முன்னெடுக்கப்பட்டுவருவதுடன், கட்டிட நிலத்தை உடைத்து தோண்டி பாரிய தேடுதல் நடவடிக்கைஒன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த இடத்திற்கு ஊடகவியலாளர்கள் எவரும் இதுவரைஅனுமதிக்கப்படவில்லை என்பதுடன், ஊடகங்களுக்கும் இது தொடர்பில் உரியவர்கள் எந்தவித தகவலும் வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.