சாவகச்சேரி நகரில் பாடசாலை மாணவர்களுக்கு நீண்ட காலமாகபோதைப்பொருள் மற்றும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்தவர்த்தகர் ஒருவர் நேற்றைய தினம் (ஜூன்09)திங்கட்கிழமை சாவகச்சேரிபொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .
சாவகச்சேரி நகர் பகுதியில் பாடசாலை மாணவர்கள் சிலர் போதைப்பொருள்பாவனையில் ஈடுபட்டு வருவதாக சாவகச்சேரி பொலிஸ்நிலையத்தின் கீழ்இயங்கும் போதைப்பொருள் குற்றச்செயல் தடுப்பு பிரிவின் உப பொலிஸ்பரிசோதகர் தலைமையிலான குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவல்களுக்குஅமைவாக சாவகச்சேரிஉள்ள பிரபல பாடசாலையின் தரம் 10 மற்றும் 11 மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் மேற்கொள்ளப்பட்டவிசாரணை மற்றும் மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையில் சாவகச்சேரிநகர்ப்பகுதியில் மரத்தளபாட திருத்தவேலை செய்யும் வர்த்தகநிலையத்தைநடத்தும் 45 வயதான வர்த்தகர் ஒருவரிடம் இருந்து போதைமாத்திரைகள்பெற்றுக்கொள்வது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த வர்த்தகர் 330 போதைமாத்திரைகளுடன் கைதுசெய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உற்படுத்தப்பட்ட போது அவர் ஜஸ்போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது.
அதனை தொடர்ந்து குறித்த நபரிடம் மேற்க்கொள்ளப்பட்ட விசாரணைகளில்தான் ஜஸ் போதைக்கு அடிமையானவர் எனவும் போதை மாத்திரைகளைபாடசாலை மாணவர்களுக்கு விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தில் ஜஸ்போதைப்பொருளை பெற்று பாவித்துவருவதாக பொலிஸாரிடம்குறிப்பிட்டுள்ளனர்.