சமூக சீரழிவு செயல்களை ஒழிக்க கோட்டை சூழலில் சுற்றிவளைப்பு.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாண கோட்டை பகுதிகளில் அநாகரிக செயல்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக பொலிஸ், தொல்லியல் திணைக்களத்துடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப் பகுதிகளில் திடீர் சுற்றிவளைப்பு கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் யாழ். மாநகர முதல்வர் வி. மணிவண்ணன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண கோட்டைப் பகுதிக்கு நேற்று (02 ஒக்ரோபர்) சென்ற மாநகர முதல்வர் அங்கு நடைபெறும் அநாகரிக செயல்கள் தொடர்பில் கேட்டறிந்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கோட்டை பகுதிகளில் அநாகரிக செயல்பாடுகளில் ஈடுபட்டு வருபவர்கள் இனங்காணப்பட்டால், அவர்களை கடுமையாக எச்சரித்து பொலிஸார் ஊடாக பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தப் சமூகச் சீரழிவு நடவடிக்கைகள், போதைப்பொருள் பாவனை மையமாக மாறிவருகிறது. கோட்டை பகுதியை சுற்றியுள்ள பற்றைக் காடுகளை அகற்றுமாறு நீதிபதிகள் யாழ். மாநகர சபையிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஆகவே இங்குள்ள பற்றைக்காடுகளை உடனடியாக அகற்றுவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

யாழ்ப்பாணக் கோட்டை பகுதி தொல்லியல் திணைக்களத்தின் ஆளுகைக்குள் இருப்பதால் தொல்லியல் திணைக்களத்தினருடன் பேசினோம். அவர்களும் இதற்கு சம்மதம் தெரிவித் துள்ளனர் – என்றார்.

 

Share this Article