By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: சங்கீதபூஷணம் செல்லத்துரை குமாரசாமியின் 31 ஆவது நாள் நினைவேந்தலும் நூல்வெளியீடும்!
Share
Notification
Latest News
“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !
நெடுந்தீவு
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
யாழ்ப்பாணம்
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!
வன்னிச் செய்திகள்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > சங்கீதபூஷணம் செல்லத்துரை குமாரசாமியின் 31 ஆவது நாள் நினைவேந்தலும் நூல்வெளியீடும்!
யாழ்ப்பாணம்

சங்கீதபூஷணம் செல்லத்துரை குமாரசாமியின் 31 ஆவது நாள் நினைவேந்தலும் நூல்வெளியீடும்!

Last updated: 2023/09/17 at 7:55 AM
Published September 17, 2023 436 Views
Share
2 Min Read
SHARE

அண்மையில் மறைந்த, ஈழத்து இசையுலகின் முடிசூடா மன்னன், சங்கீதபூஷணம் செல்லத்துரை குமாரசாமியின் 31 ஆவது நாள் நினைவேந்தலும், “வரத சரிதம்” நூல்வெளியீடும் நேற்று (செப்ரெம்பர் 16) உடுப்பிட்டி கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு நினைவுரை ஆற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்,  “யாழ்ப்பாணத்தின் பெருமளவு ஆலயங்களின் சிறப்பைப் பாடிய பக்தியின் குரலாகவும் எம் எல்லோரது மனங்களிலும் நிறைந்திருந்த ‘ஈழத்தின் சீர்காழி’ என்றழைக்கப்படும் மாமனிதர் குமாரசாமி ஐயாவின் மறைவென்பது ஈழத்து இசைத்துறையினது மாமேதையின் மறைவாக, அத்துறையில் ஓர் பேரிடைவெளியை ஏற்படுத்தியிருக்கிறது “ என தெரிவித்துள்ளார்.

அந்நினைவுரையில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்ததாவது; யாழ்ப்பாணத்தின் கலைப் பாரம்பரியத்தில் கனதிமிகு இடத்தைப் பெறும் கரவெட்டி மண்ணைப் பூர்வீகமாகக்கொண்ட இவரது குடும்பம் இயல்பிலேயே இசைக்கலையின்பால் நாட்டமுள்ள குடும்பமாகவே இருந்திருக்கிறது.

அத்தகு குடும்பப் பின்னணியின் தாக்கமிகுதியால் இளவயதிலேயே இசை மீதும் கலை மீதும் ஆர்வம் மிகுந்திருந்த இவர் அத்துறை சார்ந்தே தனது கல்வி, தொழில், வாழ்க்கைமுறை என அத்தனையையும் கட்டமைத்திருந்தார்.

தமிழகம் சென்று முறையாக சங்கீதம் கற்றதோடன்றி, தன் சொந்த மண்ணில் அக்கலையை முறையாக அரங்கேற்றம் செய்த பெருமைக்கும் உரியவர். கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் உதவி விரிவுரையாளராகவும், பிரதி அதிபராகவும் கடமையாற்றியதோடு, கரவெட்டி தொலைக்கல்வி நிலையத்தின் இசைப் போதனாசிரியராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப் பீடத்தின் வருகை விரிவுரையாளராகவும், வட இலங்கை சங்கீதசபையின் தேர்வு நெறியாளராகவும் என தான் வகித்த அத்தனை பதவிகளுக்கும் அணிசெய்த இசைத்துறைப் பேராளுமை இவர்.

ஒரு சமூகத்தின் அக உணர்வுகளை, அகப்புறச் சூழலின் தாக்கங்களை, யதார்த்தப் புறநிலைகளை, காலப்பிரவாகத்தை, வரலாற்றை, கடந்துவந்த பாதைகளை, அச்சமூகத்தின் உண்மை உணர்வுகளை பதிவுசெய்வதிலும், அடுத்த தலைமுறைக்கு அவற்றின் அடிமுறை பிறழாது கடத்துவதிலும் கலை எனும் ஊடகமே முன்னணி வகிக்கிறது.

அந்த அடிப்படையில், எமது மக்களின் தேசவிடுதலைக் கனவைச் சுமந்து நிகழ்ந்தேறிய போரின் தாற்பரியத்தை, அதன்பாலிருந்த நியாயத்தை, அடக்குமுறையாளர்களால் எமது மக்கள் எதிர்கொண்ட அவலங்களை வெளிக்கொணரும் பணிக்கு கால்கோலாக இருந்த “தமிழீழ எழுச்சிப் பாடல்களின்” மறக்கவியலாத குரலாக குமாரசாமி ஐயாவின் குரல் ஈழத்தமிழர்களின் மனங்களெங்கனும் நிறைந்தே இருக்கும் என்பது நிதர்சனம்.

ஒரு தலைமுறை தாண்டிய இசை விற்பன்னர்களை, சங்கீத ஆசிரியர்களை ஈழக் கலையுலகுக்கு உற்பவித்து, அண்மையில் மறைந்த இந்த மண்ணின் கலைஞர், “மாமனிதர்” செல்லத்துரை குமாரசாமி ஐயாவுக்கு எனது புகழ் அஞ்சலிகள் – என்றார்.

கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் முன்னாள் அதிபர் கா.கணபதிப்பிள்ளை தலைமையில் நடைபெற்ற இவ் அஞ்சலி நிகழ்வில், வரத சரிதம் நூலின் வெளியீட்டுரையை வடக்குமாகாண முன்னாள் பிரதிக்கல்விப் பணிப்பாளர் ந.அனந்தராஜ் அவர்களும், மதிப்பீட்டுரையை கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் சிரேஸ்ட விரிவுரையாளர் வேல்நந்தகுமாரும் நிகழ்த்தியிருந்தனர்.

நிகழ்வில், வடக்குமாகாண கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளரும், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளருமான சத்தியசீலன், வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் தருமலிங்கம், வலிகாமம் கிழக்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் நிரோஸ், கரவைக்குமரன் அமரர்.குமாரசாமி அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள், இசை ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த சுவாமிநாத ஐயர் பலி!

வழுக்கையாற்று புனரமைப்பிற்கான பல்கலைக்கழக மாணவர் ஆய்வு ஆரம்பம் – நிலத்தடி நீர், விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நியமனம்!!

கரித்தாஸ் கீயூடெக் செற்றிட்டங்கள் – யாழ் அரசாங்க அதிபருடன் சந்திப்பு!

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி 175 மாபெரும் உதைபந்தாட்டப் போட்டி !

Anarkali September 17, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article இளவாலையில் மாணவர்களுக்கான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு!
Next Article பாரதிபுரத்திலுள்ள தூய யாக்கோப்பு ஆலயத்துக்கு ஒலிபெருக்கி, மின் விசிறி கையளிப்பு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

You Might Also Like

யாழ்ப்பாணம்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

June 22, 2025
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

June 22, 2025
யாழ்ப்பாணம்

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

June 21, 2025
யாழ்ப்பாணம்

ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த சுவாமிநாத ஐயர் பலி!

June 21, 2025
யாழ்ப்பாணம்

வழுக்கையாற்று புனரமைப்பிற்கான பல்கலைக்கழக மாணவர் ஆய்வு ஆரம்பம் – நிலத்தடி நீர், விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி

June 21, 2025
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நியமனம்!!

June 20, 2025
யாழ்ப்பாணம்

கரித்தாஸ் கீயூடெக் செற்றிட்டங்கள் – யாழ் அரசாங்க அதிபருடன் சந்திப்பு!

June 19, 2025
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி 175 மாபெரும் உதைபந்தாட்டப் போட்டி !

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?