கொழும்பில் இன்று(ஒக்.16) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை அவசர பேரிடர்நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தினங்களில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில்கடுமையான காற்று, இடி மற்றும் மின்னலுடனான மழை பெய்யக் கூடும் என்றுஎதிர்வுகூறல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, சீரற்ற காலநிலையால் பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையானஅனைத்து உடனடி நடவடிக்கைகளும் விரைவாக மேற்கொள்ளப்படும் என்றுகொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.
இதற்காக அவசரகால மீட்பு படையினர் தயாராக இருப்பதாகஅறிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவுறுத்தலின் படி, பல பகுதிகளில்கனமழை பெய்யும் என்றும், தற்காலிக மின்னல் மற்றும் வெள்ளம் ஏற்படும்அபாயம் காணப்படுகின்றது.
இதன்காரணமாக, பொதுமக்கள் அவதானத்துடன் இருக்கவும், அவசரதேவைகளுக்கு உடனடியாக கொழும்பு மாநகர சபையைத் தொடர்பு கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசரகால உதவிக்கு, 011-2422222 மற்றும் 011-2686087 உள்ளிட்டஎண்களை தொடர்பு கொள்ளுமாறு கொழும்பு வாழ் மக்கள்அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.