நிதித் தூய்தாக்கலை தடுப்பதற்கான சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளவிசாரணைகளுக்கமைய கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலியரம்புக்வெல்லவின் மகள்கள் இருவர் மற்றும் மருமகன் ஆகியோரை பிணையில்விடுவிக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்கஉத்தரவிட்டார்.
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டகெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள்களான சமித்ரி ஜயனிகா ரம்புக்வெல்ல, அமலி நயனிகா ரம்புக்வெல்ல மற்றும் அவரது கணவரான இசுரு புலஸ்திபண்டார பொல்கஸ்தெனிய ஆகியோர் நேற்று பிற்பகல் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டனர்.
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சார்பில் முன்னிலையானஅதிகாரிகள், இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவினால்கெஹெலிய ரம்புக் வெல்லவின் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானசந்தேகத்திற்கிடமான வங்கிக்கணக்குகள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ளதரவுகளுக்கமைய இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மன்றில்குறிப்பிட்டனர்.
சந்தேகத்திற்கிடமான 16 நிலையான வைப்புக் கணக்குகள் மற்றும் 05 ஆயுள்காப்புறுதிப் பத்திரங்கள் ஆகியவற்றை மேல்நீதிமன்ற உத்தரவுக்கமையஇடைநிறுத்தியுள்ளதாகவும் அதன் பெறுமதி 97 மில்லியன் ரூபாவுக்கும்அதிகமெனவும் குறித்த அதிகாரிகள் இதன்போது தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு ஒக்டோபர் 19 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்குஎடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
நிதித் தூய்தாக்கலை தடுப்பதற்கான சட்டத்தின் கீழ் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் கைது செய்யப்பட்டு பிணைவழங்கப்பட்ட போதும் நேற்றே அவர்கள் பிணை நிபந்தனைகளைப் பூர்த்திசெய்தனர் என்பதுடன் அதன்படி அவர்களை நேற்று கொழும்பு நீதவான்நீதிமன்றம் விடுவித்தது