கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இந்திய அரசின் உலர் உணவுப் பொதிகள் விநியோகம் இன்று (20/12) இடம்பெற்றது.
வெள்ளம் மற்றும் அழிவுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்திய அரசு தொடங்கிய Sagar Bandhu’ ஒரு மனிதாபிமான உதவி நடவடிக்கையின் ஒர் அங்கமாக அனர்த்தத்தின் பாதிப்பிற்குள்ளான பொதுமக்களுக்கென இந்திய அரசாங்கம் உலர் உணவு பொதிகளை வழங்கி இருந்தது.
இன்று (20/12) பிற்பகல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் ஒரு தொகுதி உலர் உணவுப்பொதிகள் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டன.
இந் நிகழ்விற்கு யாழ் இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய்முரளி உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டு உலர் உணவுப்பொதிகளை நேரடியாக பொதுமக்களுக்கு கையளித்திருந்தனர்.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி)மாவட்ட அனர்த்த முகாமைத்துவபிரிவு உதவிப்பணிப்பாளர், பிரதம கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உத்தியோகத்தர்கள்,பயனாளிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.