யாழ். மாவட்டத்தின் கடல் கடந்த தீவுகளிலுள்ள பாடசாலைகளை அதிகஷ்டப்பிரதேசத்திலிருந்து நீக்குவதற்கு மத்திய கல்வி அமைச்சால் நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்அவர்களை, கடல் கடந்த தீவுகளின் பாடசாலை அதிபர்கள் ஆளுநர் செயலகத்தில்இன்று (ஒக்.17) மாலை சந்தித்துள்ளனர்.
நெடுந்தீவிலுள்ள 8 பாடசாலைகளில் 6 பாடசாலைகளும், அனலைதீவிலுள்ள 3 பாடசாலைகளும், எழுவைதீவிலுள்ள 2 பாடசாலைகளில் ஒரு பாடசாலையும்அதிகஷ்டப் பிரதேசத்திலிருந்து நீக்கப்படவுள்ளதாகவும் அதிபர்களால்ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.
ஏற்கனவே தீவுப் பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள்வருவதற்கு பின்னடிக்கும் நிலைமை காணப்படுகின்றது எனவும் அதிகஷ்டப்பிரதேசத்திலிருந்து நீக்கப்பட்டு அந்தக் கொடுப்பனவும் கிடைக்காமல் போனால்நிலைமை இன்னமும் மோசமாகும் என்றும் அதிபர்களால் ஆளுநருக்குதெரியப்படுத்தப்பட்டது.
இதேநேரம், கடல் கடந்த தீவுகளில் பணியாற்றும் ஏனைய அரசபணியாளர்களுக்கு விசேட ஆபத்துக் கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றநிலையில் ஆசிரியர்களுக்கு இக் கொடுப்பனவு இதுவரை வழங்கப்படவில்லைஎன்பதும் ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இது தொடர்பில் நேரடியாக தொடர்புடைய அமைச்சுக்களுடன்கலந்துரையாடுவதாக ஆளுநர் பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் சந்திப்பின் போது ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் அவர்களும்கலந்துகொண்டிருந்தார்.