By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: கடலில் பேருந்துகளை போட்ட விவகாரம்- தமிழக மீனவர்களின் ஆர்பாட்டம் இலங்கை மீனவர் நலன் சார்ந்ததா?
Share
Notification
Latest News
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
யாழ்ப்பாணம்
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
இலங்கைச் செய்தி
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
தீவகச் செய்தி
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!
வன்னிச் செய்திகள்
சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > கடலில் பேருந்துகளை போட்ட விவகாரம்- தமிழக மீனவர்களின் ஆர்பாட்டம் இலங்கை மீனவர் நலன் சார்ந்ததா?
யாழ்ப்பாணம்

கடலில் பேருந்துகளை போட்ட விவகாரம்- தமிழக மீனவர்களின் ஆர்பாட்டம் இலங்கை மீனவர் நலன் சார்ந்ததா?

Last updated: 2021/06/17 at 11:34 AM
Published June 17, 2021 498 Views
Share
2 Min Read
SHARE
இலங்கை கடலில் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கதினை அதிகரிக்கும் நோக்குடன் வடகடலில் பாவனையற்ற பேருந்துகள் மூழ்கடித்த விவகாரம் தமிழக மீனவர்கள் மத்தியில் போராட்டங்களை மேற்கொள்ளும் அளவுக்கு சென்றிருக்கின்றது.
இலங்கை கடலில் பேருந்துகளை போடுவதால் இந்திய கடலில் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்றால் அதற்கான வாய்ப்புக்களே கிடையாது.
அவ்வாறெனில் ஏன் தமிழக மீனவர்கள் பெரும் ஆர்ப்பாட்டத்தில் குதித்திருக்கின்றனர்? இவை வடபகுதி மீனவர்கள் மீதான அக்கறையா? எமது மீனவர்களின் நலன் சார்ந்ததா? என்பதை எடுத்து நோக்குவதற்கு முன்னர் குறித்த செயற்றிட்டம் தொடர்பில் ஆராய்வது பொருத்தமாகும்.
கடல் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்தினை அதிகரிப்பதற்கு ஏதுவான கடல் நீரடி பாறைகளுக்கு ஒத்த பொறிமுறையை செயற்கையாக உருவாக்கும் செயற்றிட்டங்கள் உலகில் பல நாடுகளில் இருக்கின்றன.
இவற்றுக்காக பல நாடுகளில் பாவனைக்கு உதவாத புகையிரதப் பெட்டிகள், பேரூந்துகள், கப்பல்கள், கட்டட இடிபாடுகள், கொங்கிறீற் துண்டங்கள் போன்றவற்றை கடலின் அடியில் போடுகின்ற செயற்பாடு உலக நாடுகளில் நீண்ட காலமாகப் நடைமுறையில் இருந்து வருக்கின்ற ஒன்று.
ஊலகின் வளர்முக நாடான அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் இந்தப் பொறிமுறை நீண்டகாலமாக இருந்துவருக்கின்றன.
இவற்றைவிட் இந்தியாவின் தமிழகத்தில பல ஆண்டுளாக இவ்வாறான செயற்கை இனப்பெருக்க பொறிமுறை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த இச் செயற்றிட்டம் பல தடவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவற்றைவிட பாவனைக்கு உதவாத பேரூந்துகளை ஏற்கனவே தென்பகுதி கடலில் மூழ்கடித்து இவ்வாறாக செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட்ட போது தமிழக மீனவர்கள் எந்த வித எதிர்ப்பையும் காட்டவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இவ்வாறான நிலையில் தமிழக மீனவர்கள் வடகடலில் பேருந்துகளை இறக்கிய விடயத்தை கையில் எடுத்திருப்பது ஏன்? ஏன்ற கேள்வி பலரது புருவங்களை உயரவைத்திருக்கிறது.
தமிழக மீனவர்களின் தொழில் நடவடிக்கைகளில் இலாபமீட்டும் இடமாக இருப்பது இலங்கையில் வடபகுதி மன்னார் வளைகுடா முதல் கிழக்கு முனைவரையுமே.
இக்கடலினை நம்பி தொழிலில் பல ஆயிரம் தமிழக இழுவைப்படகுகள் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தொழிலில் ஈடுபடுகின்றன.
இவ்வாறான நிலையில் வடபகுதி கடலில் பேருந்துகளை இறக்குவதால் வடக்கு மீனவர்களுக்கு ஆதாயமே ஒழிய எந்தப்பாதிப்புமில்லை.
ஆனால் தமிழக இழுவைமடித் தொழிலில் ஈடுபடும் படகுகள் இச்செயற்றிட்டத்தால் பாரிய இடர்பாடுகளை சந்திக்க நேரும். பேருந்துகள் போடப்பட்ட பகுதிகளில் இழுவை மடிகொண்டு தொழிலில் ஈடுபடமுடியாது.
ஆவ்வாறு ஈடுபட்டால் அவர்களது பெறுமதிவாய்ந்த மடிகள் அவற்றில் சிக்கி சேதாரமடைந்தால் பல இலட்சங்களை இழக்க நேரிடும் என்பதுடன் அவற்றை மீட்பதும் கடினம்.
இயற்கையான பவளப்பாறைகளை அழித்து மீன்வளத்தை அழிக்கும் இழுவைப்படகுகளின் இழுவை மடிகளால் பலம்வாய்ந்த இரும்புகளை அழிக்கமுடியாது.
இதனாலட வடக்கு கடலில் தமிழக மீனவர்கள் தாம்மால் தொழிலில் ஈடுபடமுடியாத நிலை ஏற்பட்டுவிடும் என்பது ஒருபுறம் மேலதிகமாக பேருந்துகளை இறக்காது தடுப்பதற்கான உக்தியாகவும் தமிழக மீனவர்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர் என்ற கருத்தே யதார்த்தமானது.
காலம் காலமாக வடபகுதி மீனவர்களின் கடல்வளம் தமிழக மீனவர்களால் சூறையாடி வருக்கின்றபோதும் இவற்றுக்கு இன்றுவரை நிரந்தரத் தீர்வுகள் எட்டப்படாத நிலையில் தற்போதய செயற்றிட்டம் தொடர்ந்தால் வடகடலில் இழுவைப்படகுகளின் வரவு முற்றாக நிறுத்தப்படும் நிலை வரவாய்ப்பிருக்கிறது.
ஜெ – நெடுந்தீவு

You Might Also Like

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த சுவாமிநாத ஐயர் பலி!

வழுக்கையாற்று புனரமைப்பிற்கான பல்கலைக்கழக மாணவர் ஆய்வு ஆரம்பம் – நிலத்தடி நீர், விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நியமனம்!!

SUB EDITOR June 17, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article மாகாண வைத்தியசாலைகளை சுவீகரிப்பது அதிகார பரவலாக்கலை கேலிக்கூத்தாக்கும் – த சித்தார்த்தன்
Next Article புங்குடுதீவு கடற்கரையில் இறந்த ஆமைகள் கரையொதிங்கியுள்ளன
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

You Might Also Like

யாழ்ப்பாணம்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

June 23, 2025
யாழ்ப்பாணம்

சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!

June 23, 2025
யாழ்ப்பாணம்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

June 22, 2025
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

June 22, 2025
யாழ்ப்பாணம்

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

June 21, 2025
யாழ்ப்பாணம்

ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த சுவாமிநாத ஐயர் பலி!

June 21, 2025
யாழ்ப்பாணம்

வழுக்கையாற்று புனரமைப்பிற்கான பல்கலைக்கழக மாணவர் ஆய்வு ஆரம்பம் – நிலத்தடி நீர், விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி

June 21, 2025
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நியமனம்!!

June 20, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?