By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: கடற்றொழில்சார் பழைய சட்டங்கள் திருத்தப்படும்!-அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
Share
Notification
Latest News
உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு
இலங்கைச் செய்தி
செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
யாழ்ப்பாணம்
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!
யாழ்ப்பாணம்
நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!
தீவகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > கடற்றொழில்சார் பழைய சட்டங்கள் திருத்தப்படும்!-அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
இலங்கைச் செய்தி

கடற்றொழில்சார் பழைய சட்டங்கள் திருத்தப்படும்!-அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Last updated: 2023/07/01 at 8:50 AM
Published July 1, 2023 274 Views
Share
4 Min Read
SHARE

மீன்பிடித்துறை சார்ந்த பல சட்டங்கள் மிகவும் பழையவை என்பதால், காலத்திற்கேற்ப, பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக் கூடிய சட்டதிருத்தங்களை செய்ய எதிர்பார்த்துள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இதற்கான யோசனைகளை இவ்வருட இறுதிக்குள் அமைச்சரவையில் சமர்ப்பித்து, அனுமதியைப் பெற்று, பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, அங்கீகாரத்தைப் பெறவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நாட்டில் தற்போதிருக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் மட்டுமே தீர்வுகள் இருப்பதாகவும், ஏற்கனவே இருந்த பல பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தீர்வுகளைக் கண்டுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.

‘ஸ்திரமான நாட்டிற்கு, அனைவரும் ஒரே வழிக்கு’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்றுமுன்தினம் (ஜூன் 29) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் டக்லஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, “பழையன கழிதலும் புதிய புகுதலும் என்பதற்கிணங்க, கடற்றொழில் அமைச்சின் பணிகளை ஏற்று பணியாற்றி வருகிறேன். எரிபொருள் விலையேற்றம், உலகளாவிய கொவிட் பெருந்தொற்று என்பவற்றால் மீனவர்களின் கடற்றொழிலில் தொய்வுகள் ஏற்பட்டிருந்தன.

எனினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் முன்னேற்பாடுகளுடன் அமைச்சின் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடல் உணவுகளின் விலையேற்றம் குறித்த விமர்சனங்கள் இருக்கின்றன.

நாட்டில் ஏற்கனவே இருந்த நிலைமையினால் மீன்பிடித் தொழிலில் ஏற்பட்ட தடங்கல்கள், எரிபொருள் விலையேற்றம், இறக்குமதி கட்டுப்பாடு, போதிய முகாமைத்துவம் இன்மை உள்ளிட்டவையே கடல் உணவு விலையேற்றத்திற்கு காரணமாகும்.

எனினும், வரும் காலங்களில் இவற்றை சீர்செய்து, மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டு, முன்நோக்கிச் செல்ல எதிர்பார்க்கிறோம்.

குறிப்பாக இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கைப் பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு வருவதால் கடல் வளங்கள் அழிவடைவதுடன் மீனவர்களின் வாழ்வாதாரத்திலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஜனாதிபதியின் அடுத்த புதுடெல்லி பயணத்தின் போது இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வழி ஏற்படும் என்று நம்புகின்றேன்.

வட மாகாணத்தைப் பொருத்த வரையில் நீர் வேளாண்மையை பரவலாக முன்னெடுத்து வருகிறோம். குறிப்பாக கடல் அட்டை வளர்த்தல், கடல் பாசி, இறால் பண்ணை, நண்டு பண்ணை என பல திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறோம்.

வட மாகாணத்தில் சுமார் 5000 ஏக்கரில் இந்த நீர்வளத் திட்டங்களை முன்னெடுக்கும் இலக்கு இருந்தாலும் இதுவரை 1500 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தத் திட்டங்களை விஸ்தரித்துள்ளோம். இதில் ஈடுபட பல முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளனர்.

அத்துடன் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர்கள், அல்லது முதலீடு இல்லாதவர்களுக்கும் அரசாங்கததின் உதவியோடு அந்த முதலீடுகளை செய்துவருகிறோம்.

புதிய முதலீட்டாளர்கள் தங்களின் கோரிக்கைகளை உதவி அரசாங்க அதிபரடம் முன்வைக்க முடியும். அவர் இந்தக் கோரிக்கைகளை இந்தத் தொழில்துறையுடன் தொடர்புபட்ட கடற்றொழில் திணைக்களம், நெக்டா நிறுவனம், கடலோர பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றுக்கு கையளித்த பின்பு, இந்த நான்கு தரப்பினரினதும் கூட்டு செயற்பாட்டின் ஊடாக ஒரு தீர்மானத்தை மேற்கொண்டு, முதலீட்டாளர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை பரிசீலனை செய்து அதனை நிறைவேற்றி வருகின்றனர்.

இதனைத் தவிர, மீன்பிடித்தொழில் துறை தொடர்பான பழைய சட்டங்களைத் திருத்தி, தற்போதைய சூழலுக்கு ஏற்ற வகையிலும், எதிர்காலத்திற்கு ஏற்ற வகையிலும் சட்டங்களில் திருத்தங்களை செய்ய திட்டமிட்டுள்ளோம். இந்த வருட இறுதிக்குள் இதற்கான திருத்தங்களை அமைச்சரவையில் சமர்ப்பித்து அமைச்சரவை ஊடாக பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதன்பின்னர் ஊடகவிளலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் நாட்டில் தற்போதிருக்கும் அனைத்துப் பிரச்சினைககளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் மட்டுமே தீர்வுகள் உள்ளன என்றார்.

தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கான அதிகார பரவலாக்கம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக ஜனாதிபதி உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் கருத்துக்களை தெரிவிக்கிறார்.

இதுகுறித்து உங்களின் நிலைப்பாடு என்ன என்றும் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், இந்தப் பிரச்சினைக்கு அரசியலமைப்பில் ஏற்கனவே தீர்வுகள் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் 13ஆவது திருத்தத்தின் ஊடாக இதற்கான தீர்வுகளை எட்ட முடியும் என்றும் அமைச்சர் டகள்ஸ் தேவானந்தா தெரிவித்தார்.

“சர்வரோக நிவாரணியாக ஜனாதிபதி நாட்டில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைத் தரக்கூடியவர். ஏற்கனவே இருந்த பெரும்பாலான பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் கண்டுள்ளார். தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கு முன்னோடியாகவே காணி பிரச்சினைகளைத் தீர்த்து வருகிறார்.

அரசியல் கைதிகள் என்று கூறப்படும் கைதிகளை விடுத்துவித்துள்ளார். ஒரு கை அன்றி இரண்டு கைகளையும் சேர்த்துத் தட்டினால் மட்டுமே ஓசை வரும் என்பதைப் போல் இருதரப்பினரும் பிரச்சினைக்குத் தீர்வுகாண முன்வர வேண்டும். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஆனால் தமிழர் தரப்பில் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முன்வர வேண்டும். அரசியல் இலாபங்களைக் கருத்திற்கொண்டு தமிழர் தரப்பில் சில இழுத்தடிப்புக்களைச் செய்கின்றனர். இவ்வாறு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாது.” என்று அமைச்சர் தெரிவித்தார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு முழுமையாக நட்டஈடு வழங்கப்பட்டுள்ளதா என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் டகள்ஸ் தேவானந்தா நேரடியாக பாதிக்கப்பட்ட 15032 மீனவர்களுக்கு நட்டஈடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

களுத்துறை, கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் விசேட குழுக்களை நியமித்து பல கட்டப் பேச்சுவார்த்தைகளின் பின்னர், தகவல்களைத் திரட்டி நட்டஈடு வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

3068 மில்லியன் ரூபா நட்டஈடு நான்கு கட்டங்களாக வழங்கப்பட்டுள்ளது. இதில் நேரடியாக பாதிக்கப்பட்ட 15032 மீனவர்களுக்கு நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது.

மறைமுகமாக பாதிக்கப்பட்ட 4882 மீனவர்களுக்கும் நட்டஈடு வழங்கப்பட்டது. இதற்கு மேலதிகமாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் இருப்பார்களாயின் அவர்கள் அமைச்சுடன் தொடர்புகொண்டு, தகவல்களை வழங்கலாம். இதற்கமைய தேடியறிந்து அவர்களுக்கான நிவாரணங்களையும் வழங்க முடியும்.“ என்று அமைச்சர் தெரிவித்தார்.

You Might Also Like

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

Anarkali July 1, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article பொலிஸ்மா அதிபர் நியமனம் தொடர்பில் ஜனாதிபதியிடம் சட்டத்தரணிகள் சங்கம் விடுத்த கோரிக்கை!
Next Article தொலைத் தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு எதிராகக் கவனயீர்ப்பப் போராட்டம்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு
செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!

You Might Also Like

இலங்கைச் செய்தி

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

June 26, 2025
இலங்கைச் செய்தி

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

June 23, 2025
இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

June 20, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?