யாழ்ப்பாணம், ஏழாலைப் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (மே 5) வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 15 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன.
அதிகாலைவேளை வீட்டு ஜன்னல் கம்பியை வளைத்து வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள், தாலிக்கொடி உட்பட நகைகளைத் திருடித் தப்பிச் சென்றுள்ளனர்.
அந்த வீட்டில் உள்ள இரு நாய்களுக்கும் மயக்கமருந்து கொடுக்கப்பட்டுள்ளது என்று வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.