சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை பகுதியில் இன்றையதினம்(மே08) மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன்போது ஏழாலை கிழக்கு, ஏழாலை என்ற முகவரியை சேர்ந்த குணரட்னம்குமரன் (வயது 39) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் இன்றையதினம் தனது தோட்டத்தில் மிளகாய்ஆய்ந்துகொண்டிருந்த போது மின்னல் தாக்கியது.
இந்நிலையில் உடனடியாக சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதாரவைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றிஉயிரிழந்தார்