2025 ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் புதிய மோட்டார் வாகன பதிவுகளுக்குமாத்திரம் வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) கட்டாயமாக்கப்படும் எனமோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்த நிபந்தனை மோட்டார் சைக்கிள்கள், இரு சக்கர உழவு இயந்திரங்கள் 4சக்கர உழவு இயந்திரங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்குபொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் சேவைகள்அனைத்திற்கும் TIN எண் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இது புதிய வாகன பதிவுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றுதிருத்தப்பட்டுள்ளது.
இந்த மாற்றம், வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத்தொடர்ந்து அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட நடவடிக்கையின் ஒருபகுதியாகும். இதன்மூலம், நிதி பொறுப்புணர்வை வலுப்படுத்தவும், நிர்வாகசெயல்முறைகளை ஒழுங்குபடுத்தவும் நோக்கமாக உள்ளது.
TIN எண்ணைப் பெறாத வாகன உரிமையாளர்கள் மற்றும் வாங்குபவர்கள், ஏப்ரல்15க்கு முன் அதனை பெற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்கு மோட்டார் வாகன போக்குவரத்துத்திணைக்களத்தின் தலைமை அலுவலகமான நாரஹென்பிட்டவில் உள்ள பதிவுப்பிரிவை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.