கடற்றொழிலுக்காக சென்ற குருநகர் பகுதியைச் சேர்ந்த இரு மீனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு மீனவர்கள் காணாமற்போனது தொடர்பில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, கடற்படையினர் மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளுடன் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அவசர ஆலோசனைக்கூட்டத்தில் ஈடுபட்டார்.
அவர், மீனவர்களைத் தேடும் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க அறிவுறுத்தியதைத் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
காணாமலானவர்கள் 46 வயதுடைய விமலேந்திரன் ஞானராஜ் மற்றும் 54 வயதுடைய பூலோகதாசன் என்பவர்களாகும். அவர்கள் கடந்த சனிக்கிழமை (மார்ச் 15) ஊர்காவற்துறையிலிருந்து கடற்றொழிலுக்குச் சென்று இதுவரை திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.