ஊசி மூலம் ஹெரோயினை செலுத்திய இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றிரவுஉயிரிழந்துள்ளார். சாவகச்சேரி – மட்டுவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஒருபிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
இவரை மே 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காணாது உறவினர்கள் தேடிய நிலையில் தாயாரின் வீட்டிற்கு பின்னால் சடலமாக மீட்கப்பட்டார்.
அவரது சடலம் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தியவேளை ஊசி மூலம்ஹெரோயின் பாவித்ததன் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாகதெரியவந்துள்ளது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரிநமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைகளின்பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.