உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடைபெறும் அதே வாக்களிப்புநிலையங்களில், வாக்கு எண்ணிக்கை பணிகளும் மேற்கொள்ளப்படும் எனதேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.
விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தலைவர், இதற்காக பலவழிமுறைகள் பின்பற்றப்படுவதாக தெரிவித்தார்.
இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொகுதிவாரி அடிப்படையில்நடைபெறுவதால், ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றத்திற்கும் பல தொகுதிகள்பிரிக்கப்பட்டுள்ளன. எனவே, வாக்கு எண்ணிக்கை நிலையங்களின் தூரம்மற்றும் அமைவிடத்தைப் பொறுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகதலைவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த தேர்தல் ஆணைக்குழு தலைவர்,
“ஒரு தொகுதிக்குள் ஒரே ஒரு வாக்களிப்பு நிலையம் இருந்தால், அந்தவாக்களிப்பு நிலையத்தில் வாக்கு எண்ணிக்கை கட்டாயம் நடைபெறும். முடிவுகள் அந்த இடத்திலேயே பிரகடனப்படுத்தப்படும். மற்றொரு முறையும்உள்ளது. ஒரு தொகுதிக்குள் பல வாக்களிப்பு நிலையங்கள் இருந்தால், சிலஇடங்களில் வாக்களிப்பு நிலையங்களிலே வாக்கு எண்ணப்படும். வாக்குஎண்ணப்பட்டு, முடிவு அறிக்கை மட்டும் அந்த தொகுதியில் உள்ள முடிவு பிரகடனமத்திய நிலையத்திற்கு கொண்டு வரப்படும். மற்றொரு முறையாக, தொகுதிக்குள் உள்ள அனைத்து வாக்குப் பெட்டிகளும் மாலை 4 மணிக்குப் பிறகுமுடிவு வெளியிடும் மத்திய நிலையத்திற்கு கொண்டு வரப்படும். அவைதனித்தனியாக எண்ணப்பட்டு, அந்த மத்திய நிலையத்தில் தொகுதியின் முடிவுதயாரிக்கப்படும்.
இதற்காக ஒரு சிறப்பு அதிகாரியை நாங்கள் நியமித்துள்ளோம், அவர்தொகுதிவாரி தேர்தல் பொறுப்பு அதிகாரி என அழைக்கப்படுவார். அவருக்குஇதற்கு முழு பொறுப்பு உள்ளது. அதேபோல், வாக்கு எண்ணிக்கை மத்தியநிலையத்தின் முழு பொறுப்பு பிரதான வாக்களிப்பு மத்திய நிலையபொறுப்பதிகாரியிடம் உள்ளது.
தொகுதியின் முடிவு வெளியிடும் மத்திய நிலையத்தில், அந்த தொகுதியின்இறுதி முடிவு வெளியிடப்படும். அங்கு, அந்த தொகுதியில் அதிக வாக்குகள்பெற்ற அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழு பெயரிடப்படும். இது அந்தவாக்களிப்பு மத்திய நிலையத்திலேயே நடைபெறும். பின்னர், அங்குஇருப்பவர்கள் அறிந்து கொள்ள ஒரு நகல் காட்சிப்படுத்தப்படும். அதன் பின்னர், வலைய தெரிவத்தாட்சி அதிகாரி மூல நகலை மாவட்ட தெரிவத்தாட்சிஅதிகாரிக்கு கொண்டு செல்வார்.
நாங்கள் மாவட்டங்களில் ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றத்திற்கும் முடிவுதயாரிக்கும் மத்திய நிலையங்களை அமைத்துள்ளோம். அங்கு அனைத்துமுடிவுகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, உள்ளூராட்சி மன்றத்தின் மொத்த முடிவுதயாரிக்கப்படும். அங்கு ஒவ்வொரு அரசியல் கட்சியும் பெற்ற ஆசனங்களின்எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். அதேபோல், விகிதாசார பிரதிநிதித்துவத்தின்கீழ் ஒவ்வொரு அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவிற்கு கிடைக்கவேண்டிய உறுப்பினர் பதவிகளின் எண்ணிக்கையும் தீர்மானிக்கப்படும்.
இதன் மூலம் உள்ளூராட்சி மன்றத்தின் இறுதி முடிவு தயாராகும். அந்த முடிவுதேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்படும். தேர்தல் ஆணைக்குழு அனுமதித்தபின்னரே மாவட்டத்தில் இருந்து அந்த உள்ளூராட்சி மன்றத்தின் முடிவுபிரகடனப்படுத்தப்படும். அதே நேரம், ஊடகங்களுக்கும் அந்த முடிவுவெளியிடப்படும்.
நாங்கள் முதல் வாக்கு முடிவை இரவு 11 மணிக்கு முன்பாக வெளியிடஎதிர்பார்க்கிறோம்.” என்றார்.