சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு, 48 மாத கால நீட்டிக்கப்பட்ட நிதிவசதி திட்டத்தின் கீழ் இலங்கையுடனான மூன்றாவது மதிப்பாய்வு நிறைவுசெய்துள்ள நிலையில், இதன் மூலம், பொருளாதாரக் கொள்கைகள் மற்றும்சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிப்பதற்காக, இலங்கைக்கு உடனடி நிதி வசதியாக336 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.
இதுவரை இந்தத் திட்டத்தின் கீழ் சர்வதேச நாணய நிதியத்திலிருந்துஇலங்கைக்கு வழங்கப்பட்ட மொத்த நிதி உதவி 1.34 பில்லியன் அமெரிக்கடொலர்களாகவும் அதிகரித்துள்ளது.
இலங்கையின் செயல்பாடு இந்தத் திட்டத்தின் கீழ் வலுவாக உள்ளதாக சர்வதேசநாணய நிதியம் மேலும் தெரிவித்துள்ளது.
சமூகச் செலவினங்களுக்கான சுட்டெண் இலக்கைத் தவிர, 2024 ஆம் ஆண்டுடிசம்பர் மாத இறுதிக்கான ஏனைய அனைத்து அளவு இலக்குகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன.
2025 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில், பல கட்டமைப்பு அளவுகோல்கள்பூர்த்தி செய்யப்பட்டுள்ளன அல்லது தாமதத்துடன் செயல்படுத்தப்பட்டுள்ளன.
சமீபத்தில் நிறைவு செய்யப்பட்ட கடன் மறுசீரமைப்பு பணிகள், கடன்நிலைத்தன்மையை உருவாக்குவதற்கான பாதையில் வெற்றிகரமான முடிவாகஉள்ளன.