இலங்கை-ஈரானிய கப்பல் விபத்தில் இருந்து மீட்கப்பட்டவர்களின் உடல்களை சேமித்து வைப்பதற்கு உதவுவதற்காக, காலி வணிக சமூகத்தால் காலி தேசிய மருத்துவமனைக்கு ரூ.2.2 மில்லியன் மதிப்புள்ள நடமாடும் குளிர்பதன CONTAINER நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

தற்போது, ஈரானிய கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 84 நபர்களின் உடல்கள் மருத்துவமனையில் உள்ள இரண்டு நடமாடும் குளிர்பதன கிடங்குகளில் சேமிக்கப்படுகின்றன. ஒரு அலகு சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டது, மற்றொன்று காலி வணிக சமூகத்தால் நன்கொடையாக வழங்கப்பட்டது.
மார்ச் 04 இரவு காலியில் உள்ள தேசிய மருத்துவமனையின் பிணவறைக்கு கொண்டு வரப்பட்ட 84 உடல்களின் பிரேத பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளன.
கடலிலிருந்து மீட்கப்பட்ட ஏராளமான உடல்களை சேமித்து வைப்பதில் அதிகாரிகள் சிரமங்களை எதிர் கொள்வதாக , மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.