சமூக பாதுகாப்பிற்கான தேசிய விருது வழங்கும் நிகழ்வு இலங்கை சமூகபாதுகாப்பு சபையினால் நேற்றையதினம் (ஒக். 16) திருகோணமயில் நடைபெற்றது.
இவ்விருது வழங்கும் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்டம் பயனாளிகள்இணைப்பின் அடிப்படையிலும், பணச்சேகரிப்பின் அடிப்படையிலும் தேசியரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. இவ் விருதினை யாழ்ப்பாணமாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பெற்றுக்கொண்டார். மேலும், இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் தவிசாளர் திரு.டி.எம்.கே. திசாநாயக்க அவர்களினால் அரசாங்க அதிபர் அவர்கள் கெளரவிக்கப்பட்டார்என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்விருது வழங்கும் நிகழ்வில் பணச்சேகரிப்பின் அடிப்படையில் தேசியமட்டத்தில் முதல் மூன்று இடங்களையும் முறையே பருத்தித்துறை, நல்லூர், சண்டிலிப்பாய் பிரதேச செயலகங்கள் பெற்றுக்கொண்டன.
தனிப்பட்ட அடைவு மட்டங்களிற்கான தேசிய விருதினை 29 கிராம மட்டஉத்தியோகத்தர்களான கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்திஉத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர்பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் விருந்தினர்களாக இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் தவிசாளர்டி.எம்.கே. திசாநாயக்க, பிரதி பொது முகாமையாளர் கல்தாரி டி சில்வா, கிராமஅபிவிருத்தித் திணைக்களத்தின் ஒருங்கிணைப்பு செயலாளர் மோ.பிரகாஷ், சமூக பாதுகாப்பு உத்தியோகத்தர் சந்தைப்படுத்தல் லக்மால், அம்பாறை, யாழ்ப்பாணம், திருகோணமலை, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, மட்டக்களப்பு மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள், மேலதிகஅரசாங்க அதிபர்கள், சமுர்த்தி பணிப்பாளர்கள், திட்டப்பணிப்பாளர்கள், பிரதேசசெயலர்கள், உதவி பிரதேச செயலர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் , கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின்அமைச்சர் அவர்களின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்குபற்றி சிறப்பித்ததை குறிப்பிடத்தக்கது.