2025ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று (ஒகஸ்ட் 07) வியாழக்கிழமையுடன் நிறைவடைந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் இரண்டாம் தவணை விடுமுறை இன்று முதல் அமுலாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் வரும் ஒகஸ்ட் 18ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.