By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: இந்திய உதவியுடன் மீள இயங்கும் காரைநகர் படகு உற்பத்திச் சாலை!
Share
Notification
Latest News
யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
யாழ்ப்பாணம்
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வன்னிச் செய்திகள்
வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
தீவகச் செய்தி
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!
நெடுந்தீவு
ஈரான் – இஸ்ரோல் இடையே போர் நிறுத்தம் !
உலகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > தீவகச் செய்தி > இந்திய உதவியுடன் மீள இயங்கும் காரைநகர் படகு உற்பத்திச் சாலை!
தீவகச் செய்தி

இந்திய உதவியுடன் மீள இயங்கும் காரைநகர் படகு உற்பத்திச் சாலை!

Last updated: 2023/12/13 at 1:50 PM
Published December 13, 2023 478 Views
Share
2 Min Read
SHARE

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் காரைநகர் படகு உற்பத்திச் சாலையின் உற்பத்தி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஜப்பானிய அரசாங்கம் இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்திற்கு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பயன்படுத்துவதற்கென 07 குளிரூட்டி வாகனங்களை வழங்கியிருக்கின்றது.

இதன் மூலமாக இம் மாகாணங்களில் மீனின உற்பத்தி விருத்திக்கு மேலும் பங்களிப்பினை வழங்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்

கடற்றொழில் அமைச்சு தொடர்பிலான சபை வாத விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், சீனோர் நிறுவனத்தைப் பொறுத்தவரையில் அதன் பணிகள் முறையே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த வருடத்திலே, மகாவலி அதிகார சபை, அபிவிருத்தி லொத்தர் சபை, உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் ஆகியன சீனோர் நிறுவனத்தின் தயாரிப்புகளை பெற்றுள்ளன.

மேலும், கடற்றொழில் சுற்றுலாத்துறைக்குத் தேவையான படகுகள் மற்றும் கண்ணாடி இழை வகை உற்பத்தி என்பன மேற்கொள்ளப்படவுள்ளன.

அத்துடன், இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் காரைநகர் படகு உற்பத்திச் சாலையின் உற்பத்தி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

மேலும், தற்போதுள்ள  கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டமூலங்களின் அனைத்து திருத்தங்களையும் இணைத்து,  கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டத்தில் சில சேர்க்கைகளையும், அகற்றல்களையும், திருத்தங்களையும் மேற்கொண்டு, புதிய சட்ட வரைபொன்று தயாரிக்கப்பட்டு வருகின்றது.

எமது கடற்றொழிற்துறையை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்வதும், அபிவிருத்தி செய்வதும், கடற்றொழிலாளர்களின் நலன்களைப் பேணிப் பாதுகாப்பதும் இதன் நோக்கமாகும்.

இது வரைபே அன்றி முடிவல்ல. இந்த வரைபு தற்போது கடற்றொழில் துறையினர், துறைசார்ந்தவர்கள் போன்றோரின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பெறுகின்ற வகையில் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது மூன்று சுற்றுகள் விடப்பட்டு, அதன் மூலம் பெறப்பட்ட கருத்துக்களில் முக்கியமான கருத்துக்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன.

இதன் பின்னர் இன்னுமொரு சுற்றும் விடப்படும். அதன் பின்னரே இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு, அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் சட்ட வரைஞர் திணைக்களத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு, நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரப்படும்.

இதனை சிலர் அறியாமை, சுயலாப அரசியல் காரணங்களுக்காகவும், தங்களது ஆதாயங்களுக்காகவும் பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், சர்வதேச தொழிலாளர் அமைப்பானது கடற்றொழிலாளர்களின் நலன்கள் கருதிய சர்வதேச தரம்வாய்ந்த பல்வேறு விடயங்களை வலியுறுத்துகின்றது. இலங்கை இந்த சாசனத்தில் கைச்சாத்து இடாவிட்டாலும், அதன் சாசனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை படிப்படியாக நடைமுறைப்படுத்துவதற்கு நாம் இணைந்து ஆரம்பித்துள்ளோம்.

அதன்  ஒரு முக்கிய மைல் கல்லாக கடற்றொழில் ஒழுங்குமுறைகளின் பணியின் துவக்கம் என்கின்ற நிகழ்வு இம்மாதம் 08ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்றிருந்தது. அதில் நானும்,  அமைச்சர் மனுச நாணாயக்கார அவர்களும், எமது இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த டி சில்வா அவர்களும் கலந்து கொண்டிருந்தோம்.

கடற்றொழிலாளர்கள் தொடர்பில் நல்லதொரு பார்வையினை இந்த அமைப்பு கொண்டிருக்கின்றது. இதனை நாம் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.

வேலணையில் மாணவர்களுக்கு கல்விசார் உபகரணம் வழங்கும் நிகழ்வு!

நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!

நயினாதீவில் சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு !

வேலணை பிரதேச சபைத் தவிசாளராக சிவலிங்கம் அசோக்குமார் தெரிவு!

ஊர்காவற்றுறை பிரதேச சபைத் தவிசாளராக அன்னலிங்கம் அன்னராசா தெரிவு!

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவத்தையொட்டி அரை மணிநேரத்துக்கு ஒரு சேவை!

குறிகாட்டுவான் துறைமுக மீளமைப்பு பணி ஆரம்பம்!!

Anarkali December 13, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article யாழ்.தீவுகளுக்கு மின்சாரம் வழங்க இந்தியாவிடம் விலைமனுக் கோரும் அரசு!
Next Article அடுத்த ஆண்டு முதல் கல்வி முறைமையில் பெரும் மாற்றங்கள்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

You Might Also Like

தீவகச் செய்தி

வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.

June 24, 2025
தீவகச் செய்தி

வேலணையில் மாணவர்களுக்கு கல்விசார் உபகரணம் வழங்கும் நிகழ்வு!

June 24, 2025
தீவகச் செய்தி

நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!

June 23, 2025
தீவகச் செய்தி

நயினாதீவில் சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு !

June 20, 2025
தீவகச் செய்தி

வேலணை பிரதேச சபைத் தவிசாளராக சிவலிங்கம் அசோக்குமார் தெரிவு!

June 20, 2025
தீவகச் செய்தி

ஊர்காவற்றுறை பிரதேச சபைத் தவிசாளராக அன்னலிங்கம் அன்னராசா தெரிவு!

June 20, 2025
தீவகச் செய்தி

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவத்தையொட்டி அரை மணிநேரத்துக்கு ஒரு சேவை!

June 20, 2025
தீவகச் செய்தி

குறிகாட்டுவான் துறைமுக மீளமைப்பு பணி ஆரம்பம்!!

June 18, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?