இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாகயாழ்ப்பாணம் வருகை தந்த கணவன் மற்றும் மனைவி கடந்த புதன்கிழமைவிமான நிலைய பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
இண்டிகோ விமானம் 6E 1177 சென்னையில் இருந்து யாழ்ப்பாண சர்வதேசவிமான நிலையத்துக்கு வந்த விமானத்தில் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும்1996 ஆம் ஆண்டு தலை மன்னாரிலிருந்து இந்தியாவுக்குபடகு மூலம் பயணம் செய்து தமிழ்நாட்டு மண்டபம் அகதிகள் முகாமில்தங்கியிருந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறான நிலையில் விமான மூலம் யாழ்ப்பாணம் வருகை தந்த நிலையில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய குடி வரவு குடிவரவு கட்டுப்பாட்டுஅதிகாரிகள் நடத்திய விசாரணைகளின் பின்னர் பொலிசாரிடம்ஒப்படைக்கப்பட்டனர்.