By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: இந்தியப் பிரதமரின் கருத்துக்கு தமிழ்த் தலைமைகள் வரவேற்பு!
Share
Notification
Latest News
செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
யாழ்ப்பாணம்
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!
யாழ்ப்பாணம்
நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!
தீவகச் செய்தி
யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > இந்தியப் பிரதமரின் கருத்துக்கு தமிழ்த் தலைமைகள் வரவேற்பு!
இலங்கைச் செய்தி

இந்தியப் பிரதமரின் கருத்துக்கு தமிழ்த் தலைமைகள் வரவேற்பு!

Last updated: 2023/07/22 at 9:18 PM
Published July 22, 2023 521 Views
Share
3 Min Read
SHARE

அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதனூடாக ஒற்றை ஆட்சிக்கு அப்பாற்சென்ற அரசியல் தீர்வையும் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளமையை தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் வரவேற்றுள்ளனர்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் , இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (ஜூலை 21) வெள்ளிக்கிழமை தலைநகர் புதுடில்லியில் நடைபெற்றது.

இதன்போது அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி மாகாணசபைத் தேர்தல்களை நடத்துமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்திய பிரதமர் மோடி, தமிழ் மக்களின் அபிலாசைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுமென எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கு முன்பதாக அவரிடம் வலியுறுத்தப்படவேண்டிய விடயங்களை உள்ளடக்கி இந்தியப் பிரதமர் மோடிக்கு கடிதங்களை அனுப்பி வைத்திருந்த இலங்கையின் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள், இந்தியாவின் வலியுறுத்தல் தொடர்பில் பலதரப்பட்ட பிரதிபலிப்புக்களை வெளிக்காடியுள்ளனர்.

அதன்படி இது குறித்து கருத்து வெளியிட்ட இலங்கை தமிழரசு கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எ.சுமந்திரன், இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் மாகாணசபைத் தேர்தல்களை நடாத்துதல் ஆகியவற்றை இந்தியா வலியுறுத்தியுள்ளமை வரவேற்கத்தக்கது என்றும் இவ்விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது சட்டவிரோதமானது என்றும் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை தமிழ் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் மோடி ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தம் ஒருபுறமிருக்க ஒற்றையாட்சிக்கு அப்பாற்சென்ற அரசியல் தீர்வே தமிழ் மக்களின் அபிலாஷையாக காணப்படும் நிலையில் அதனையும் மோடி தனியாக வலியுறுத்தியுள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதுமாத்திரமன்றி இவ்விரு விடயங்களையும் தனித்தனியாக நோக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அடுத்ததாக இந்தியாவின் கடந்தகால வலியுறுத்தல்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை ’13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக இலங்கை அரசாங்கம் இந்தியாவிற்கு வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படுமென எதிர்பார்க்கின்றோம்’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளமை ஓரளவுக்கு வரவேற்கத்தக்க முன்னேற்றகரமான நகர்வாகும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

மேலும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்ற கோரிக்கையை 13ஆவது திருத்தத்துடன் தொடர்புபடாத வகையில் இந்தியப்பிரதமர் மோடி முன்வைத்திருப்பாரேயானால் அதனையும் தாம் வரவேற்பதாக அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை பிரதமர் மோடியின் வலியுறுத்தல் தொடர்பில் திருப்தியடைவதாக கூற முடியாது என்றும், மாறாக அவர் தனது கடமையை தான் செய்திருக்கின்றார் என்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் தமிழ் மக்கள் சார்பில் இந்தியாவே கையெழுத்திட்டது என்றும் எனவே, அது சார்ந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தும் கடப்பாடு இந்தியாவிற்கு உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், இந்தியப் பிரதமரினால் இலங்கை ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளையும் இலங்கை மீதான இந்தியாவின் எதிர்பார்ப்பினையும் நம்பிக்கையையும் வரவேற்பதாகவும், தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கும் தரப்பாக இல்லாமல் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தரப்பு என்ற அடிப்படையில் அவ்வொப்பந்தத்தின் கீழ் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவாதங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஆவண செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளது.

மேற்படி விடயங்கள் தொடர்பாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் வலியுறுத்தினார்.

மேலும் இது குறித்து கருத்து வெளியிட்ட ரெலோவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் பிரதமர் மோடியினால் வலியுறுத்தப்பட்ட விடயங்களை நாம் வரவேற்கும் அதேவளை இது எமக்கு பெரிதும் ஆறுதல் அளிக்கின்றது. இருப்பினும் கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவரது இந்திய விஜயத்தின் பின்னர் 13, 13 பிளஸ் என்றெல்லாம் பேசிய போதிலும் அவை எவையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

எனவே இம்முறையும் இவ்வலியுறுத்தல்கள் வெறும் பத்திரிகை செய்திகளாக நின்றுவிடாமல், அவை உரியவாறு நிறைவேற்றப்படுவதற்கான அழுத்தத்தை இந்தியா வழங்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

You Might Also Like

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

Anarkali July 22, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கச் சென்றவர் மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு!
Next Article இந்தியா தொடர்ந்தும் இலங்கையைக் கண்காணிக்க வேண்டும்!- சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தல்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!
நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!

You Might Also Like

இலங்கைச் செய்தி

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

June 23, 2025
இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

June 20, 2025
இலங்கைச் செய்தி

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?