அரியாலையில் நடந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அரியாலை, பூம்புகாரைச் சேர்ந்த அற்புதலிங்கம் சுதர்சன் (வயது-38) என்பவரே உயிரிழந்துள்ளார். அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அரியாலைப் பகுதியில் கணவனும், மனைவியும் மோட்டார்சைக்கிளில் பயணித்தபோது எதிர்த்திசையில் வேகமாக வந்த ஹையேஸ் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஹையேஸ் வாகனத்துக்கு முன்பாகப் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியின் வலப்பக்கம் திருப்புவதற்காக நிறுத்தப்பட்டபோது, கட்டுப்பாட்டை இழந்து எதிரே பயணித்த மோட்டார்சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது என்று தெரிவிக்கப்படுகின்றது.
இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார். விபத்துத் தொடர்பான விசாரணைகள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.