அனலைதீவு பிரதேச மருத்துவமனையில், மத்திய சுகாதார அமைச்சின் 6.3 மில்லியன் ரூபா நிதியில், கடற்படையின் பங்களிப்புடன் மறுசீரமைக்கப்பட்டமருத்துவர் விடுதி திறப்பு விழாவும், விரிவுபடுத்தப்பட்ட சுகாதாரசேவை அறிமுகநிகழ்வும் அனலைதீவு பிரதேச மருத்துவமனை வளாகத்தில் இன்று (மார்ச்30) சிறப்பாக இடம்பெற்றது.
மருத்துவர் விடுதியை வட மாகாண ஆளுநர் மற்றும் வட பிராந்திய கடற்படை கட்டளைத்தளபதிரியர் அட்மிரல் கருணாதுங்க ஆகியோர் இணைந்து திறந்துவைத்ததுடன் மருத்துவமனை வளாகத்தைபார்வையிட்டு தேவைகளையும் கேட்டறிந்து கொண்டனர்
அனலைதீவு பிரதேச மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி நுவனி சிறப்பான சேவையினை மக்களுக்கு வழங்க வருகின்றமை சிறப்பானதும் பாராட்டுக்குரியதுமாகும்.
இந்த நிகழ்வில் வட மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், வடக்கு மாகாண பிரதமசெயலாளர் இ.இளங்கோவன், வடக்கு பிராந்திய கடற்படை கட்டளைத்தளபதிரியர் அட்மிரல் கருணாதுங்க, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்மருத்துவர் சமன் பத்திரன, யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள்பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன், ஊர்காவற்றுறை சுகாதாரமருத்துவ அதிகாரி மருத்துவர் த.சுசிதரன், ஊர்காவற்றுறை பிரதேச செயலர்ஈ.தயாரூபன் உள்ளிட்ட ஊர் மாக்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.