இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றுகைச்சாத்திடப்பட உள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைவிஜயம் எதிர்வரும் 4 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், இந்த விஜயத்தின் போது குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளதுடன், இந்திய அமைதிகாக்கும் படை இலங்கைக்கு வந்து சுமார் நான்கு தசாப்தங்கள்கடந்துள்ள நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றுகைச்சாத்திடப்படுகின்றது.
எதிர்வரும் சனிக்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இந்தியபிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான இருதரப்பு உத்தியோகப்பூர்வகலந்துரையாடல்கள் கொழும்பில் இடம்பெறவுள்ளன.
இரு தரப்பினரும் நாணய பரிமாற்ற கட்டமைப்பை உறுதிப்படுத்தவும், கடன்மறுசீரமைப்பு தொடர்பான ஒரு ஒப்பந்தம் உள்ளடங்களாக பல துறைசார்ந்தஒப்பந்தங்களில் கையெழுத்திட ஏற்கனவே இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.
இந்தியா, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இணைந்துதிருகோணமலை எண்ணெய் நிறுவனங்களை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம்பிரதமர் மோடியின் விஜயத்தின் போது இறுதிப்படுத்தப்பட உள்ளது. மேலும்இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்ஒன்று முதல் முறையாக கைச்சாத்திடப்பட உள்ளதாக இந்திய வெளியுறவுசெயலர் விக்ரம் மிஸ்ரி உறுதிப்படுத்தியுள்ளார்.
பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானால், சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அமைதி காக்கும் படை வெளியேற்றியதுதொடர்பான கசப்பான அத்தியாயத்தை விட்டு, இந்தியா–இலங்கை பாதுகாப்பில்ஒரு பெரிய முன்னேற்றப் பாதையை குறிக்கும்.
எவ்வாறாயினும் உத்தேச பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்த நுணுக்கமான விவரங்கள்இதுவரையில் வெளிப்படுத்தப்பட வில்லை. ஆனால் இந்தியப் பெருங்கடல்பிராந்தியத்தில் சீனாவின் அதிகரித்து வரும் இருப்பின் பின்னணியில் இருவழிபாதுகாப்பு ஈடுபாடுகளை இது மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.