விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் நாடாளுமன்ற உறுப்பினர்க.இளங்குமரனை பிரதமர் ஹரினி அமரசூரிய நேற்று(பெப்.15) மாலைவைத்தியசாலையில் சந்தித்து நலன் விசாரித்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்ற பிரதமர் ஹரினி அமரசூரியஇளங்குமரனின் உடல் நிலைமை தொடர்பில் வைத்தியர்களிடம் கேட்டறிந்துகொண்டார்.
இதன்போது கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்றஉறுப்பினர் சிறீபவானந்தராஜா, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைபணிப்பாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன்பயணித்த கார் யாழ்ப்பாணம் தனங்கிளப்பு பகுதியில் விபத்துக்குள்ளானது.
கிளிநொச்சியிலிருந்து பயணித்துக் கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்இளங்குமரனின் வாகனமானது சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்டதனங்கிளப்பு பகுதியில் பயணித்த சிறிய லொறியுடன் மோதிவிபத்துக்குள்ளானது.
தலையில் பலத்த காயத்துக்குள்ளான நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்இளங்குமரன் உட்படமூவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.