By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: வவுனியா-மன்னார் வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் மகளும் பலி!
Share
Notification
Latest News
“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !
நெடுந்தீவு
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
யாழ்ப்பாணம்
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!
வன்னிச் செய்திகள்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > வன்னிச் செய்திகள் > வவுனியா-மன்னார் வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் மகளும் பலி!
வன்னிச் செய்திகள்

வவுனியா-மன்னார் வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் மகளும் பலி!

Last updated: 2023/06/16 at 12:34 PM
Published June 16, 2023 682 Views
Share
1 Min Read
SHARE

வவுனியா – மன்னார் விதியில் கன்னாட்டி பகுதியில் பாடசாலைக்குத் தனது மகளை அனுப்புவதற்காகச் சென்ற தாயும் அவரது 6 வயதான மகளும் ஹென்டர் ரக வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.

இச் சம்பவத்தில் கன்னாட்டி பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய சிவலோகநாதன் சுபோகினி, 6 வயதுடைய டினுசிகா என்ற இருவரே மரணமடைந்துள்ளனர்.

accident (1)
accident (6)
accident (4)
accident (3)
accident (5)
accident (2)

குறித்த சம்பவம் இன்று(ஜூன்  16) காலை இடம்பெற்றுள்ளது. காலை 7 மணியளவில் கன்னாட்டி பகுதியில் இருந்து பூவரசங்குளம் பாடசாலைக்குச் செல்வதற்காகக் குறித்த தாயும் மகளும் அவர்களது வீட்டிற்கு முன்பாக உள்ள வீதியில் பேருந்துக்காகக் காத்திருந்தனர்.

இதன்போது வவுனியாவில் இருந்து மன்னார் பகுதி நோக்கி வேகமாகப் பயணித்த ஹெண்டர் ரக வாகனம் வீதியை விட்டு இறங்கி கரையில் நின்ற அவர்கள் மீது மோதியுள்ளது.

விபத்தில் தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.

மற்றொரு சிறுவன் ஹெண்டர் ரக வாகனத்தைக் கண்டதும் ஓடிச்சென்று விபத்தைத் தவிர்த்துக்கொண்டதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற போது ஹெண்டர் ரக வாகனத்தில் மூவர் பயணித்திருந்தனர்.விபத்தை அடுத்து அவர்களில் ஒருவர் தப்பிச்சென்ற நிலையில் ஏனைய இருவரையும் ஊர்மக்கள் துரத்திப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதேவேளை விபத்தையடுத்து பொறுமை இழந்த பொதுமக்கள் ஹெண்டர் ரக வாகனத்தை சரமாரியாகத் தாக்கி சேதப்படுத்தியதுடன் அதனை எரிப்பதற்கு முற்பட்டுள்ளனர்.

இதனால் குறித்த பகுதியில் குழப்பமான சூழல் ஏற்ப்பட்டிருந்ததுடன் மன்னார் வீதியுடனான, போக்குவரத்தும் சிலமணிநேரங்கள் பாதிக்கப்பட்டிருந்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் நிலமையை கட்டுப்படுத்தியதுடன் விபத்து தொடர்பான விசாரணைகளை பறையணாலங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You Might Also Like

வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற மீனவர் மாயம்-படகு மீட்பு !

“பிடியளவு கமநலத்திற்கு” தேசிய நிகழ்ச்சித் திட்டம் கிளிநொச்சியில்!

மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் பணியாளர்கள் கெளரவிப்பு.

ஒரே வாக்கு வித்தியாசத்தில் வெற்றி – வவுனியா மாநகரசபை சங்குக்கு

கண்டாவளை சட்டவிரோத மணல் அகழ்வு – கட்டுப்படுத்த அமைச்சர் குழு களவிஜயம்.

கரைச்சி பிரதேச சபையின் கன்னியமர்வு நேற்று!

“ஆனையிறவு உப்பு “ பெயர் மாற்றம் பெற்று சந்தைக்கு!

Anarkali June 16, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article தரம் 5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15
Next Article ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியின் ஜூபிலி கொண்டாட்டங்கள் நாளை!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

You Might Also Like

வன்னிச் செய்திகள்

வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

June 22, 2025
வன்னிச் செய்திகள்

முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற மீனவர் மாயம்-படகு மீட்பு !

June 19, 2025
வன்னிச் செய்திகள்

“பிடியளவு கமநலத்திற்கு” தேசிய நிகழ்ச்சித் திட்டம் கிளிநொச்சியில்!

June 19, 2025
வன்னிச் செய்திகள்

மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் பணியாளர்கள் கெளரவிப்பு.

June 18, 2025
வன்னிச் செய்திகள்

ஒரே வாக்கு வித்தியாசத்தில் வெற்றி – வவுனியா மாநகரசபை சங்குக்கு

June 16, 2025
வன்னிச் செய்திகள்

கண்டாவளை சட்டவிரோத மணல் அகழ்வு – கட்டுப்படுத்த அமைச்சர் குழு களவிஜயம்.

June 14, 2025
வன்னிச் செய்திகள்

கரைச்சி பிரதேச சபையின் கன்னியமர்வு நேற்று!

June 14, 2025
வன்னிச் செய்திகள்

“ஆனையிறவு உப்பு “ பெயர் மாற்றம் பெற்று சந்தைக்கு!

June 13, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?