வடக்கில் வனஇலாக,வனஜீவராசிகள் திணைக்களத்தினால் எல்லையிடும்நடவடிக்கை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஒட்டுசுட்டான் முத்தையன்கட்டுப்பகுதியில் நடைபெற்ற சந்திப்பின்போதுகருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கில் காணிகளுக்கு வனஜீவராசிகள்திணைக்களத்தினால் எல்லைக்கற்கள் போடுவது தொடர்பில் கடந்த வாரம்நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் வடக்கு மாகாண ஆளுநர், அரசாங்கஅதிபர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் ,காணிபிரதி அமைச்சர் நீர்பாசன பிரதிஅமைச்சர்,வனஇலாகா திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டவர்களுடன்கலந்துரையாடல் இடம்பெற்றது.
பொருத்தமான நடவடிக்கை இதன்போது, வடக்கில் வனஇலாக திணைக்களத்தினால் காணிகளுக்குஎல்லையிடும் நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளோம்.
கடந்த அரசாங்க காலகட்டத்தில் ஜீ.பி.எஸ்.தொழில்நுட்பம் ஊடாகஎல்லையிடப்பட்டுள்ளது அதுவும் வர்த்தகமானி அறிவித்தல் ஊடாகஎல்லையிடப்பட்டுள்ளது இதனை நிறுத்தியுள்ளோம்.
கிராமத்து மக்கள் கிராமசேவையாளர்,பிரதேச செயலாளர்.மாவட்ட அரசாங்கஅதிபர்களுடன் கலந்துரையாடி மக்கள் குடியிருக்கும் காணிகள் அல்லதுவிவசாயம் செய்யும் காணிகளை விடுவிக்கும் வகையிலான கலந்துரையாடல்கள்ஐனாதிபதி மட்டத்தில் நடைபெற இருக்கின்றது.
அதன் பின்னர் பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்தெரிவித்துள்ளார்